‘பிரதமரைக் கவிழ்க்க சதி ’ ஸெட்டி, கனி, எம்ஏசிசி தலைவர்மீது அம்னோ இளைஞர் பகுதி புகார்

reportபேங்க்   நெகாரா  முன்னாள்  ஆளுனர்   ஸெட்டி  அக்தார்    அசீஸ்,   பணி ஓய்வு  பெறவுள்ள   மலேசிய   ஊழல்தடுப்பு    ஆணைய(எம்ஏசிசி)த்   தலைவர்   அபு  காசிம்   முகம்மட் ,  முன்னாள்   சட்டத்துறைத்   தலைவர்  அப்துல்  கனி   பட்டேல்  ஆகியோருக்கு  எதிராக    அம்னோ  இளைஞர்  பகுதி     போலீஸ்  புகார்   ஒன்றைச்  செய்துள்ளது.

அம்மூவரும்   பிரதமர்  நஜிப்   அப்துல்   ரசாக்கைக்   கவிழ்க்கும்  சதித்திட்டம்  ஒன்றில்    சம்பந்தப்பட்டிருப்பது   தெரியவந்துள்ளதாக   அம்னோ  இளைஞர்   உதவித்   தலைவர்   கைருல்  அஸ்வான்  ஹருன்  கூறினார்.

கைருல்  டாங்   வாங்கி   போலீஸ்   தலைமையகத்தில்   அவர்களுக்கு  எதிராக   புகார்   செய்தார்.

அம்மூவரும்  இரகசிய   தகவல்களை   அனுமதியின்றி   அமெரிக்க  புலனாய்வு  பிரிவு (எப்பிஐ)  உள்பட  பல   வெளிநாட்டு  நிறுவனங்களுக்கு   கொடுத்திருப்பதாய்    சந்தேகிக்கப்படுவதாக   அவர்  அப்புகாரில்  கூறியுள்ளார்.