தேவைகள் முடிந்ததும் தாய் பாரமா? சிந்திக்கவைக்கும் பதிவு

தேவைகள் முடிந்ததும் தாய் பாரமா? சிந்திக்கவைக்கும் பதிவு - Cineulagam

நம் வாழ்க்கையில் ஆயிரம் உறவுகள் கடந்து போகலாம். ஆனால் தாயின் உறவுக்கு ஈடாக எதையும் சொல்ல இயலாது. சுயநலமில்லாத தாயை பெற்ற பிள்ளைகள் பலர் தங்கள் தேவை இருக்கும்வரை தான் கவனிக்கின்றனர்.

புலம்பெயர்ந்து போன தமிழர்கள் தங்கள் குழந்தைகளை கவனித்துக்கொள்வதற்காக தங்களது அம்மாக்களை சொந்த நாட்டிலிருந்து வரவழைத்து தங்களுடன் வைத்துக்கொள்கின்றனர்.

ஆனால் தங்கள் பிள்ளைகள் வளர்ந்து தானாக வளர்ந்து தங்களை கவனிக்க தொடங்கியதும் அம்மாக்கள் வீட்டுக்கு பாரமாக தெரிகின்றது. அவர்கள் செய்யும் செயல்கள் முகம் சுளிப்பதாக தெரிகிறது. அவர்களுக்கு செய்யும் செலவுகளை கூட கணக்கு பார்க்கின்றனர். கருவறை தந்த தாய்க்கு தன் வீட்டில் சிறு அறை இல்லை என்னும் நிலை இருப்பது மனவேதனை தான்.

இதுபற்றி இந்த வாரம் பாஸ்கி மன்மதன் தன்னுடைய செல்பி அக்கம் பக்கம் நிகழ்ச்சியில் குறிப்பிட்டுள்ளார்.

-http://www.cineulagam.com