இரயில்வே திட்டம் தொடர்பில் சரவாக் ரிப்போர்ட் கூறும் செய்திக்கு அமைச்சர் மறுப்பு

rail1எம்டிபி-இன்  கடன்களைச்   சரிக்கட்ட   கிழக்குக்  கரை    இரயில் (இசிஆர்எல்)  திட்டத்துக்கான   செலவுத்  தொகை  ரிம30 பில்லியனிலிருந்து  ரிம60 பில்லியனுக்கு   உயர்த்தப்படும்  என்று   சரவாக்  ரிப்போர்ட்    ஆகக்  கடைசியாகக்  கூறியுள்ளதை  புத்ரா   ஜெயா    மறுக்கிறது.

அத்திட்டத்துக்கான   செலவு    குறித்து     அமைச்சரவை    விவாதிக்கவில்லை  என்று   பொதுப்  பணி  அமைச்சர்   படில்லா    யூசுப்   கூறினார்.

“சரவாக்  ரிப்போட்   என்ன  சொன்னாலும்   எனக்குக்  கவலை  இல்லை.  அது  பற்றி  அமைச்சரவையில்   பேசப்படவே  இல்லை”, என  மலாய்  மெயில்   ஆன்லைனிடம்    அமைச்சர்   சொன்னார்.

செய்தியை  வெளியிட்ட   சரவாக்  ரிப்போர்ட்   அது   தொடர்பான   ஆவணங்கள்  சிலவற்றையும்    வெளியிட்டிருந்தது.   அவை  இரகசியமாக   தகவல்   அளித்தவரிடமிருந்து    கிடைக்கப்பெற்றவையாம்.