மண்ணின் மைந்தன் ரஜினிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்!

rajinikanthமண்ணின் மைந்தன் ரஜினிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என மகாராஷ்டிராவை சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.

கபாலி பீவர் இந்திய அரசியல்வாதிகளையும் விட்டு வைக்கவில்லை. மகாராஷ்டிராவை சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. அனில் கோத், மண்ணின் மைந்தனான ரஜினிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறுகையில்,

ரஜினி அவர்களுக்கு மகாராஷ்டிரா மாநிலத்தின் உச்சபட்ச விருதான ‘மகாராஷ்டிரா பூஷன்’ வழங்கப்பட வேண்டும்.

மேலும் மத்திய அரசு ரஜினிகாந்திற்கு பாரத ரத்னா விருது வழங்க வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த மண்ணின் மைந்தனான ரஜினி, திரைப்பட உலகில் தனக்கென ஒரு தனிப்பட்ட இடத்தை பிடித்துள்ளார்.

ரஜினி கடவுளின் அவதாரத்துக்கு நிகராக அவரது ரசிகர்களால் மரியாதை அளிக்கப்பட்டு, கொண்டாடப்படுகிறார்.

கபாலி திரைப்படம், உலகம் முழுவதும் 8 ஆயிரத்திற்கு அதிகமான திரைகளில் வெளியிடப்பட்டதே இதற்கு உதாரணம் என்று தெரிவித்துள்ளார்.

– Maalai Malar