வழக்குரைஞர் மன்ற முன்னாள் தலைவர் கனியின் வழக்குரைஞராக நியமனம்

ganiமுன்னாள்    சட்டத்துறைத்     தலைவர்      அப்துல்   கனி   பட்டேல்,   பிரதமரைக்  கவிழ்க்க    சதி    செய்ததாக     அம்னோ  இளைஞர்  பகுதி   போலீசில்    புகார்   செய்ததை    அடுத்து   மலேசிய   வழக்குரைஞர்    மன்றத்தின்    முன்னாள்   தலைவர்    இரகுநாத்   கேசவனைத்   தம்  வழக்குரைஞராக   நியமித்துள்ளார்.

“நான்தான்    அப்துல்  கனியைப்  பிரதிநிதிக்கிறேன்.  சட்ட    நடவடிக்கை    மேற்கொள்ளுமுன்னர்    அறிவுறுத்தலுக்குக்    காத்திருக்கிறேன்”,  என  இரகுநாத்   மலேசியாகினியிடம்    தெரிவித்தார்.

எப்படிப்பட்ட   நடவடிக்கை   எடுக்கப்படும்   என்பதை   அவர்   விவரிக்கவில்லை.