1எம்டிபி கணக்குகளை இலவசமாக தணிக்கை செய்ய “சார்ட்டெட் அக்கவுண்டன்” ரபிசி தயார்

 

chartedaccountantrafisiபிகேஆர் உதவித் தலைவர் ரபிசி ரம்லி குற்றச்சாட்டுகளில் அமிழ்ந்திருக்கும் 1எம்டிபிக்கான புதிய கணக்காய்வர் குழுவில் சேர்ந்துகொள்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார்.

பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினரான அவர் ஒரு தகுதி பெற்ற சார்ட்டெட் அக்கவுண்டன். அவர் Institute of Charted Accountants England and Wales மற்றும் Malaysian Institute of Accountants ஆகிய அமைப்புகளில் அங்கம் பெற்றுள்ள உறுப்பினர்.

“நான் எனது சேவையை இலவசமாகவும் அளிக்கத் தயாராக இருக்கிறேன்”, என்று அவர் இன்று வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறியுள்ளார்.

1எம்டிபி விவகாரத்தில் தவறுகள் ஏது இல்லை என்று அதன் வாரிய இயக்குனர்கள் உறுதியாக நம்பினால், மக்களை நம்ப வைப்பதற்கும் சிக்கனத்தை கடைபிடிப்பதற்கும் மிகச் சிறந்த வழி தம்மை புதிய தணிக்கை குழுவில் ஓர் உறுப்பினர் நியமிக்க வேண்டும் என்றாரவர்.

இது பற்றி தாம் அதிகாரப்பூர்வமாக 1எம்டிபி இயக்குனர்கள் வாரியத்தின் தலைவர் இர்வான் சிரீகருக்கு எழுதப் போவதாக ரபிசி மேலும் கூறினார்.