போர்க்குற்றவாளிகளுக்கு மன்னிப்பே வழங்கக்கூடாது! தண்டனை அவசியம்! மக்கள் வலியுறுத்து

WarCrime1எங்கள் பிள்ளைகளின் அவலச்சாவுக்கு நீங்கள் இழப்பீடு கொடுப்பதானால், அந்தஇழப்பீடு என்பது எங்கள் பிள்ளைகளை படுகொலை செய்த இராணுவத்தினருக்கு தண்டனைவழங்குவதாகத்தான் இருக்கும்.

எங்கள் பிள்ளைகள் காணாமற்போனதற்கு யார் காரணமாகஇருந்தார்களோ, அவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படவேண் டும்.ஒருபோதுமே மன்னிப்பு வழங்கக்கூடாது.

இவ்வாறு போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறையை அமைப்பது தொடர்பான மக்கள்கருத்தறியும் அமர்வில், மாந்தை கிழக்கு மக்கள் ஆணித்தரமாக தமது கருத்துக்களைத்தெரிவித்தனர்.

சட்டத்தரணி மனோகரி முத்தெட்டுவேகம தலைமையிலான 11 பேர் அடங்கிய செயலணியினரால்நல்லிணக்கப் பொறிமுறை அமைப்பது தொடர்பான மக்களுடைய கருத்துக்களைக்கேட்டறியும் அமர்வுகள் வடக்கில் நடைபெறுகின்றன.

முல்லைத்தீவு மாந்தை கிழக்குப்பிரதேச செயலகத்தில் செயலணியின் அமர்வு நேற்று முன்தினம் இடம்பெற்றது.

என்னுடைய கணவனை பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் அடைத்து வைத்துள்ளார்கள்.அவரை விடுதலை செய்யாவிட்டால், என்னுடைய கண்ணீரைத் தினமும் பார்க்கும்பிள்ளைகள் நாளை ஆயுதம் எடுப்பதை யாராலும் தடுக்க முடியாது.

புனர்வாழ்வுகொடுப்பது மனதில் உள்ள நினைவுகள் அழிந்து நல்ல சிந்தனைகளை உருவாக்கி, நல்லநிலைமைக்கு வரவேண்டும் என்கின்ற காரணத்துக்குத்தான். இங்கே இது நடக்கவில்லை.

தந்தையை அடைத்து வைத்திருக்கிறார்கள் என்ற காரணத்திற்காகவே நாளை எனதுபிள்ளைகள் வன்முறையில் ஈடுபடக்கூடும். எனது கணவன் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று நான்கு பிள்ளைகளுடன் வாழ்ந்துவரும் பாண்டியன்குளம் கிராமத்தில்வசிக்கும் பெண்மணி கண்ணீருடன் தனது கருத்துக்களை பதிவு செய்தார்.

எமது பிள்ளைகள் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டார்கள். பலர் அவர்களாலேயேகாணாமல் ஆக்கப்பட்டார்கள். கொலை செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள்தண்டனைக்கு உட்படுத்தப்படவேண்டும்.

நாங்கள் விடும் கண்ணீர் சும்மாயில்லை.குற்றம் செய்தவர்கள் எவராயிருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்படவேண்டும். தண்டனை கட்டாயம் கிடைக்க வேண்டும்.

எமது பிள்ளைகளைக் கொன்றுவிட்டு தாய் தந்தையர்களுக்கு எல்லாம் இழப்பீடுகொடுப்பதாக கூறுகின்றார்கள்.எமது பிள்ளைகளின் உயிரை திருப்பிக் கொடுக்க முடியுமா? இயலாது.

எனவே,எங்களுக்கு இழப்பீடு கொடுப்பதாக இருந்தால், கொலை செய்தவர்களுக்கு தண்டனைவழங்குங்கள். அதுவே எங்களுக்கான இழப்பீடாக அமையும்.

தண்டனை கட்டாயம் தேவை.கொலைசெய்யச் சொல்லித் தூண்டியவர்களுக்கும் தண்டனை கொடுக்கவேண்டும். கொலைசெய்தவர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று மாந்தை கிழக்கு மக்கள்கருத்துக்களைப் பதிவு செய்தனர்.

காணாமற்போனோர் தொடர்பான அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் அமைக்க போவதாகஅரசு தெரிவித்துள்ளது. அந்த அலுவலகங்கள் தமிழ் மக்கள் செறிந்து வாழும்பகுதிகளில் அமைக்கப்படவேண்டும்.

குறிப்பாக போரால் பாதிக்கப்பட்டமுல்லைத்தீவில் அமைவது பொருத்தமானது. இந்த அலுவலகங்களில் நியமிக்கப்படும்அதிகாரிகள் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளைத் தெளிவாக அறிந்த தமிழ்பேசுபவர்களாகவும் மனிதாபிமானம் உள்ளவர்களாகவும் இருக்கவேண்டும்.

அப்போதுதான்எமது நியாயமான கோரிக்கைகள் அவர்களிடம் உள்ளவாறே சென்றடையும் என்றும் மக்கள்தெரிவித்தனர்.

இந்த அமர்வில் மாந்தை கிழக்கை சேர்ந்த 60 பேர் தங்களுடைய கருத்துக்களைதெரிவித்தனர். அவர்களில் பெரும்பான்மையாக காணாமற்போனவர்களின் உறவுகளாவர்.

-http://www.tamilwin.com

TAGS: