தங்கேஸ்வரி பேராக் சட்டமன்றத்தின் முதல் பெண் சட்டமன்றத் தலைவர்

assemblyபேராக்  மஇகா   மகளிர்  பகுதி   முன்னாள்  தலைவர்   எஸ்.தங்கேஸ்வரி  பேராக்  சட்டமன்றத்    தலைவராக   இன்று    தேர்ந்தெடுக்கப்பட்டார். எஸ்.கே.  தேவமணி     விலகியதை    அடுத்து    சட்டமன்றத்   தலைவர்  பதவி  காலியானது.

பேராக்  சட்டமன்றத்   தலைவராக  ஒரு  பெண்  தேர்ந்தெடுக்கப்பட்டது   இதுவே   முதல்முறையாகும்.  சட்டமன்றத்   தலைவருக்காக   நடந்த   வாக்கெடுப்பில்   தங்கேஸ்வரிக்கு    30 வாக்குகளும்    எதிரணி  வேட்பாளர்  பத்து  காஜா  எம்பி  வி.  சிவகுமாருக்கு   24  வாக்குகளும்    கிடைத்தன.  4  சட்டமன்ற  உறுப்பினர்கள்   வாக்களிப்பில்  கலந்து  கொள்ளவில்லை.

இதற்குமுன்   சட்டமன்றத்   தலைவராக  இருந்த    தேவமணி    பிரதமர்துறை    துணை  அமைச்சராக   நியமிக்கப்பட்டதை     அடுத்து   அப்பதவியிலிருந்து   விலகினார்.