அனந்தி மற்றும் சிவகரன் ஆகியோர் தமிழரசுக் கட்சியில் வகித்த பதவிகள் அக்கட்சியால் பறிக்கப்பட்டது. வடக்கு மாகாணசபை உறுப்பினரான அனந்தி சசிதரனின் தமிழரசுக்கட்சி மகளீர் அணி தலைவி பதவியும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் வி.எஸ்.சிவகரனின் பதவியும் தம்மால் பறிக்கப்பட்டுள்ளது என இலங்கை தமிழ் அரசுக் கட்சி அறவித்துள்ள தகவல் நேற்று வெளியாகியுள்ளது.
அத்துடன் அவர்களை 3ஆண்டுகள் சாதாரண உறுப்புரிமையில் வைத்திருப்பது எனவும் அக்கட்சி தீர்மானித்துள்ளது. அனந்தி மற்றும் சிவகரன் ஆகியோர் தமிழரசுக்கட்சியின் அரசாங்கத்திற்கு ஆதரவான போக்குக்கு எதிராக தற்போது குரல் கொடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
அண்மைக்காலமாக வடமாகாணசபையில் எழுந்துள்ள வடமாகாண அமைச்சர்கள் மற்றும் வடமாகாணசபையின் உறுப்பினர்களுக்கிடையே முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் முகமாக வட மாகாண சபையில் தற்போது பதவியில் இருக்கக்கூடிய அமைச்சர்களை நீக்கி புதிய அமைச்சர்களைத் தெரிவுசெய்யும் தீர்மானம் கடந்த வடமாகாணசபை அமர்வின்போது கொண்டுவரப்பட்டது. இவ்விடயம் தொடர்பாக வவுனியாவில் 14.08.2016 அன்று இடம்பெற்ற மத்தியக்குழுக்கூட்டத்தில் வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கவிருப்பதாகவும் இதற்கு தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்களும், அங்கத்தவர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
உண்ட வீட்டுக்கு இரண்டகம்
வடமாகாண சபையின் செயற்பாடுகளையும், அபிவிருத்திகளையும் சீர்குலைக்கும் நோக்கில் முதலமைச்சரது செயற்பாடுகள் அமைந்திருப்பதாகவும், இதனைச் சீர்செய்யும் நோக்கிலேயே தமிழரசுக் கட்சியின் மத்தியக்குழுக் கூட்டம் அவசரமாக ஒழுங்கு செய்யப்பட்டது. இதில் வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக பல நடவடிக்கைகள் எடுக்கப்படவிருப்பதாக இந்த மத்தியக்குழுக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாணசபையின் அமைச்சரவையில் மாற்றம் கொண்டுவரப்பட்டால் அது முதலமைச்சரின் அரசியல் பயணத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையிலேயே இத்தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருப்பதாகவும், இவருக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையும் வடமாகாண சபையிலே கொண்டுவரப்படவிருப்பதாகவும் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எது எவ்வாறாயினும் தமிழ் மக்கள் பேரவையின் பின்னின்று வடக்கு முதல்வர் செயற்படுவதானது அவர் தனக்குத்தானே குழிவெட்டும் செயற்பாடாகவே அமையும் எனலாம். ‘உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும்’ செயற்பாட்டை முதல்வர் விக்னேஸ்வரன் அவர்கள் முன்னெடுத்திருப்பது அவரின் இயலாமையை வெளிப்படுத்தி நிற்கிறது எனலாம்.
தமிழரசுக் கட்சியிலிருந்து விலக்கப்பட்ட சிவகரன், அனந்தி சசிதரன் ஆகிய இருவரும் 03 வருடங்கள் உறுப்பினர்களாகச் செயற்பட தமிழரசுக்கட்சி அனுமதி
இன்றைய தினம் (14.08.2016) நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் மத்தியக் குழுக்கூட்டத்தின்போது ஏற்கனவே கட்சியின் நடவடிக்கைகளுக்கு எதிராகவும், தன்னிச்சையாகச் செயற்பட்டதாகக் கூறப்பட்ட தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் பதவி சிவகரனிடமிருந்து பறிக்கப்பட்டு 03வருடங்களுக்கு எவ்வித பதவிகளும் இன்றி அவர் உறுப்பினராகச் செயற்பட தமிழரசுக்கட்சியினால் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல வடமாகாணசபையின் உறுப்பினர் அனந்தி சசிதரன் அவர்களுக்கும் 03வருடங்கள் உறுப்பினராகச் செயற்பட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இக்காலத்தில் இவர்களுடைய செயற்பாடுகள் அவதானிக்கப்பட்டு, இவர்கள் கட்சியோடு இணைந்து செயற்படாதுவிடில் கட்சியிலிருந்து விலக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தகவல்: http://www.thinappuyalnews.com/archives/74750
யார் இந்த அனந்தி என்ற கேள்வி மீண்டும் எழுகிறது. தனது கட்சியே தன்னை ஒதுக்கியுள்ள வேளையில், இவர் மீது புதிய சந்தேகங்கள் வருவதில் ஆசரியம் இல்லை. இவர் உண்மையில் ஒரு தமிழ் தேசிய போராளியா அல்லது அதை துடைத்தொழிக்கும் ஒரு தேசிய வாதியா? அடித்தோம் பிடுத்தோம் என்று மல்லு கட்டி கொண்டு மலேசிய விவகாரத்தில் இவர் எதட்காக நுழைந்தார் என்ற கேள்விகள் எழுகின்றன. பாதிப்படைந்த விடுதலைபுலிகள் மலேசிய நிதி வழி மறைமுக வளர்ச்சி அடையக்கூடாது என்ற என்னமா? இவர் இனி எப்படி தன்னை அருகதை கொண்ட ஒரு தமிழ் தேசிய விடுதலைக்கு போராடும் நபர் என்று கொண்டு செல்ல இயலும்?
‘arm-twisting’ நடக்கிறது என்பது புரியவில்லையா? அதற்கு பலிகடாவாகி அனாதியானார் அனந்தி. பேசாமல் கொடுப்பதை வாங்கிக் கொண்டு பயில போட்டுக் கொண்டு போனால் எல்லாம் சரியாக நடந்திருக்கும். தானைத் தலைவர் வாயில் சொன்னால் பிழைக்காத தெரியாத பெண்மணி.
இனி யாரும் நிதி திரட்டி அங்கு வாழும் மக்களுக்கு உதவ முன்வருவது சிரமம். பசுபதி ஐயாவும் ஆறுமுகம் ஐயாவும் எடுத்த பல போராட்டம் நடவடிக்கை போன்றவை சுயநல அற்ற வகையில் உள்ளதை நான் அறிவேன். இந்த அம்மா பத்திரிகை செய்தி போட்டு உள்ளத்தையும் குட்டி சுவராக்கி விட்ட்து.
எதையும் உருப்படியா செய்யமாட்டார்கள், செய்ப்பவர்களையும் விட மாட்டார்கள் – இந்த சனியன்கள்.
எமது மக்கள் போராட்ட வேட்கை ஒடுக்கப்பட்ட நிலையில், அதை வைத்து விலை பேசும் அனந்தியை ஆதரிக்க தமிழ் மக்கள் தயாராக இல்லை. இனப்படுகொலை நீதி வேண்டும் அதற்கும் அப்பால் பதவி என்றதும் தர்மத்தை தாண்டி செயல் படுவதாய் உள்ளதை தமிசரசு கட்சி கண்டிக்கிறது
அனந்தி சசிதரனை தவறாகச் சித்திரிக்க நினைக்கிறது இந்த செம்பருத்தி இணைய தளம். அவரின் பதவி பறிக்கப்பட்டது என்பதே பெரும் தவறு. அவர் இன்றும் அவருடைய பதவியில் இருக்கிறார். இன்று ஒரு நிகழ்வில் மக்களின் முன்னே உரையாற்றியும் உள்ளார். அனந்தி ஒரு அரசியல் போராளிதான். 37 உறுப்பினர்கள் கொண்ட வடமாகணசபையில் ஒரே ஒரு பெண் அவர். முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு அடுத்தபடியாக மக்களிடம் அதிக வாக்குகள் பெற்றவர். அவரை இலங்கை அரசாங்கம் இன்றும் விடுதலைப் புலி என்றே முத்திரை குத்தியிருக்கிறது. அதனால்தான் அவரின் கணவர் எழிலனை கொடூரமாக கொன்றது. எழிலன் விடுதலைப் புலிகளின் எத்தகைய பொறுப்பில் இருந்தவர் என்பது உலகறியும். மகிந்த ஆட்சியில் தேர்தலை நெருங்கியபோது சம்பந்தன் தலையிலான தமிழரசுக் கட்சியின் ஒரு கூட்டத்தின்போது யாரை ஆதரிப்பது என வாக்கு சேகரிக்கப்பட்டது. மகிந்தவையா மைத்திரியையா என்பதே அதுவாகும். எல்லோரும் ஒவ்வொருவரை குறிப்பிட இருவருமே போர்க்குற்றவாளிகள் என எழுதிக் கொடுத்துவிட்ட அனந்தி, சம்பந்தனின் கோபத்திற்கு ஆளாகினார் என்பது பலருக்குத் தெரியாது. அதனால்தான் சம்பந்தரால் பலமுறை அனந்தி பல சவால்களை எதிர்கொண்டார். எனவே தனக்கு வழங்கப்பட்ட மகளிர் அணித் தலைவி எனும் பதவியை உடனடியாக ரத்து செய்கிறேன் என கடிதம் ஒன்றை எழுதிக் கொடுத்த அனந்திக்கு 3 வருடங்களின் பின்னர் 2 தினங்களுக்கு முன்னதாக ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவித்தது தமிழரசுக் கட்சி. அதை வேண்டுமென்றே செம்பருத்தி திரித்து எழுதிய செய்திதான் இந்தச் செய்தி. வடமாகாணசபை வேறு. தமிழரசுக் கட்சி வேறு. தமிழரசுக் கட்சியை ஈழத் தமிழர்களே புறக்கணிக்கத் தொடங்கிவிட்டனர். சம்பந்தன் பிரபாகரன் காலத்தில் நடத்திய நாடகமும் இப்போது பிரபாகரனை சர்வாதிகாரி என்றும், மக்களைக் கொன்றொழித்த கொடுமையான யுத்தத்தை புரிந்தவர் என்றும் வாய்கூசாமல் அறிக்கைகள் விடுகிறார். உன்னுடைய கணவர் எழிலன்தான் பிரபாகரனுடன் சேர்ந்து யுத்தத்தை ஆரம்பித்தவர் என்று அனந்தியைப் பார்த்து ஆவேசமாக பேசிய சம்பந்தனை அனந்தி மட்டுமல்ல ஈழமக்களும் மன்னிக்க மாட்டார்கள். செம்பருத்தி இணையம் தயவுசெய்து செய்திகளின் தனமை அறிந்து பதிவிடவும். நெருப்புக்குள் வாழ்ந்துகொண்டு இன்னும் ஈழப் போராட்டத்திற்கும் மக்களுக்கும் குரல் கொடுப்பவர்களை அவமதிக்கும் செய்திகளை வெளியிடாதீர்கள். பெரும் ஈழத் துரோகம்.
இவர் யாரோ ஒருவரின் தூண்டுதலின் பேரில் தவறான அறிக்கையை விட்டு மாட்டிக் கொண்டார்.
ஈழத்தில் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை இங்கிருக்கும் நாம் அனுமானிக்க முடியாது. நமது மலேசிய அரசாங்கம் ஈழ தமிழர்களுக்கு வழங்கிய 10 லட்சம் டாலர் பற்றி அதனை எந்த வகையில் பகிர்ந்தளிக்கப்பட்டது என்பது பற்றியும் கேள்வி எழுப்பி இருந்ததின் வழி சர்ச்சைக்குள்ளானார். ஆனாலும் அந்த நிதி பற்றி வினா தொடுத்ததில் ஆனந்தி பக்கம் நியாயம் இருப்பதாகவே நான் உணர்கிறேன். ஐயா சித்தர் இந்த பிரச்சனையை பொதுவான கண்ணோட்டத்தோடு அனுகுங்கள் !
மோகன் அவர்களே, ஆனந்தியை குறை சொல்லுவதற்கு முன் நம்ம ஊரு தலைவர்களையும் நீங்கள் கேள்வி கேட்டிருக்க வேண்டும்; அந்த 10 லட்சம் USD விவகாரம். இல்லையே ? அப்படி இருக்க, உங்கள் குற்றச்சாட்டு ஒரு தலை பட்சமாக இருக்குதே ?
குமுதா உண்மை நிலையை சரியாக பதிவு செய்துள்ளார் ..
புரளி சதி பிளவுகளை உருவாக்கும் உளவு அமைப்புக்களின் தேவைகளுக்காக பல ஊடகங்கள் செயல்படுகிறது …
மிக திறமையான நேர்மையான ஊடகவியலாளர்களும் இப்படியான சதிவலைகளில் சிக்கியுள்ளனர் ..ஒரு செய்தியை ஆராயாமல் சேறு அடிப்பதில் வல்லவர்கள் நம் மாக்கள் .இளஞ்சரணி தலைவர் சிவகாரன் ஒரு திறமையான துடிப்பான சோரம்போகாத ஒருவர் …
சம்பந்தன் தலைமையில் தலைவர்கள் நீண்டகாலமாக தமிழர்களின் பிரச்னையை வைத்து அரசியலில் தங்கள் குடும்பம் சிறப்பாக வெளிநாடுகளில் வாழ அவர்களும் லக்ஸரி வாழ்க்கை வாழ்கிறார்கள் …ஒட்டு போடுறது என்னமோ மக்கள்தான் …இவர்கள் மக்களுக்கு வேலை செய்வதில்லை ..இந்திய அரசு நலன்களுக்காக அவர்களின் தேவைகளுக்காக ஈழத்தமிழர் போராடடம் அரசியலை பயன்படுத்தப்படுகிறது …இந்தியாவுக்கு தாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று அமெரிக்கணும் போர்க்குற்றம் மனிதாபிமானம் என்கின்றபோர்வையில் இடியாப்ப சிக்கலாக பாவப்படட எல்லைத்தமிழன் வாழ்க்கை அல்லாடுகிறது …சிலபேர் உத்தமர்கள் போன்று படம் காட்டுவார்கள் ஆனால் சம்பந்தப்படடவர்களுக்கு தெரியும் என்ன நடக்கிறது என்று … ஈழ போரை காம்பிச்சு உண்டியல் இந்திய பலர் பலநாடுகளில் தொழிலதிபர்களாகவும் கோடிஸ்வரர்களாகவும் வளம் வருவதை நாம் அறிவோம் ..
இலங்கை இஸ்லாமிய அரசியல் வாதிகள் அவர்களின் மதத்தவர்களுக்கு செய்யும் சேவையில் பத்துவீதம்கூட தமிழ் அரசியல் வாதிகள் செய்வதில்லை ..தேர்தல்காலங்களில் வீர எழுச்சி உரைகள் தமிழர்களின் காத்தில்பாயும் ..வென்றவுடன் நல்லிணக்கம் ..இந்து ஆலயம் மாட்டு இறைச்சிக்கடையாக மாறும் ..ஆலய நிலத்தை அடாவடியாக ஆக்கிரமித்து ஆலயத்துக்கு செல்லும் நடைபாதையை மறித்து புத்த ஆலயம் கடத்தப்படும் .ஆலயத்தை விடவும் பெரிதாக .. சம்பந்தம் தலைமையில் உள்ளவர்கள் அரசிடமிருந்து தங்கள் குடும்பம் சொந்தங்களுக்கு தேவையானதை கவனித்துக்கொண்டு காலத்தை கடத்துகிறார்கள் ..சிவகரன் ,ஆனந்தி இருவரும் இறுதி போரில் இனஅழிப்பு என்பதில் உறுதியாக பதிவு செய்கிறார்கள் ..சுமந்திரன் என்பவர் டபுள் ஏஜென்ட் …இவர் தமிழரசு கடசியில் உளவு அமைப்புகளின் தேவைகளுக்காக குறுகிய காலத்தில் உள்வாங்கப்பட்டு பிளவுகளை உருவாக்கி அனைத்து முடிவுகளையும் எடுக்கக்கூடிய நிலையில் இருக்கிறார் …கிறிஸ்தவ பெந்தோகோஸ் மதம் சார்ந்தவர் இவரைப்போல் அதிகமானோர் ஈழ அரசியலை ஆக்கிரமித்துள்ளனர் ..எல்லாம் அமெரிக்காவின் மனிதாபிமான சேவைகளில் அடங்கும் ……தமிழர் போராட்ட்டத்தை மதமாற்றத்தால் சிதைக்கலாம் என்பது இன்றய நிதர்சனம் …பெரும்பாலும் கத்தோலிக்கர்களும் சரி மரபுவழி சைவ சமயத்தவரும் அறம்சார்ந்துதான் வாழ்கிறார்கள் …உளவு அமைப்புகளால் புதிது புதிதாக உருவாக்கப்படும் மதப்பிரிவுகள் மக்களை பிழைபுப்படுத்தி சுரண்டி சமுதாய சீர்கேடுகளை நாகரிகம் என்கின்றபோர்வையில் அழிவை நோக்கி செல்கிறது ,,
ஸ்ரீகர முதல்வன் wrote on 5 August, 2016, 10:37
இலங்கைக்கு 13 முறை சென்றுள்ளேன். ஒவ்வொரு ஆண்டும் கம்பன் விழாவில் கலந்து கொண்டுள்ளேன் ஆனால் இலங்கையின் வடமாகாண சபை உறுப்பினர் ஆனந்தியை தெரியாது என்றும், இலங்கையின் வடமாகாண சபை உறுப்பினர்களை சந்திக்க நேரம் இல்லை என்றும் மஇகா டத்தோ சரவணன் ஒரு கேளிவிக்கு பதிலளித்ததாக தமிழ் பத்திரிக்கையில் செய்தி வந்துள்ளது.
மஇகா டத்தோ சரவணன் மரியாதை நிமித்தமாகக்கூட இலங்கையின் வடமாகாண சபை உறுப்பினர்களை சந்திக்க நேரம் இல்லை என்று கூறியிருப்பதை நம்ப முடியவில்லை.
+++++++
தெரியாதவங்களை கட்சியில் இருந்து கல்தா கொடுத்தாச்சு அப்புறம் என்ன புது தலைவர்களை நியமிக்கும் வரையில் மஇகா-வோடு சேர்ந்து மலேசிய தமிழ் பேரவைகள் “இலங்கை தமிழர்களுக்காக நிதி” என்று அள்ளு அள்ளு தள்ளு தள்ளு என ஒரு ரவுண்டு வரலாமே.
2012-ல் கிடைத்த உதவி நிதிக்கு 2016-ல் ஏனோதானோவென்று கணக்கை சொல்லிவிட்டு நிம்மதியாக சும்மா இருக்கிறவங்களை உசுப்பேற்றி விடுகிறீர்களே கபாலி.
குமுதாவுக்கு நன்றி. உங்கள் கருத்து நன்றாக உள்ளது, வாழ்த்துக்கள். இந்தச்செய்தி பெருந்தவறு என்றால் செம்பருத்தி திருத்தம் செய்ய வேண்டும்.
மேலும் இதில் கட்சி பதவி என்றுதானே உள்ளது. பதவி என்று இல்லையே! அரைகுறையாக படித்து விட்டு, அனந்தி போல் குமுதாவும் செம்பருத்தி மேல் சாடுவது நல்லதல்ல.
மேலும் குமுதா உணர வேண்டிய முக்கியமான ஒன்று – இங்குள்ள தமிழர்களுக்கு ஈழ போராட்ட உணர்வை ஊட்டிய மாபெரும் பங்கை செம்பருத்தி குடும்பம் ஆற்றுயுள்ளது. அனந்தி பதவி கிடைத்தவுடன் இங்குள்ள குரோத நோக்கம் கொண்ட ஒரு நாளிதழுடன் இணைந்து தன் தலை மீது மண் வாரி போட்டுக்கொண்டதில் எனக்கும் சங்கடமாகத்தான் உள்ளது.
நீலவாணன் முதலில் ஒரு தெளிவைப் பெற வேண்டும். ஆனந்திக்கு இதில் ஆர்வம் உண்டாக காரணம் என்ன? இந்த பணம் சோரம் போய் விட்டது என்று அவரால் எப்படி முடிவு எடுக்க முடியும்? விளக்கம் வேண்டுமானல் முறையாக செயல் பட்டு இருக்கலாம். அதை விடுத்து பத்திரிக்கை வழி பக்கம் பக்கமாக அவதூறு செய்திகளை அள்ளி வீச காரணம் என்ன? அனந்தி நல்லவர் என்பதில் உடன்பாடு உள்ளது அவர் மேற்கொண்ட செயல் முறை ஒரு நல்ல போராளிக்கு அழகல்ல, அது அநாகரிகமானது எனது கருத்து.
இது தமிழ்நாட்டில் நடந்திருந்தால் இந்நேரம் திராவிடன் தெலுங்கன் வடுகன் என ஒப்பாரி வைக்கும் கூட்டம் தமிழனை அழிக்க திராவிடன் தெலுங்கன் வடுகன் தேவையில்லை தமிழனை அழிக்க தமிழனே போதும் என்பதை இப்போதாவது புரிந்து கொள்வார்களா
அனந்தி சசிதரன் அவர்கள் தவறு செய்து விட்டார் என்றே வைத்து கொள்வோம். அதற்காக மற்றவர்கள் எல்லாம் 10 லட்சம் USD விவகாரத்தில் சரியாக நடந்து கொண்டார்கள் என்று பொருள் படுமா ? அடுத்தவர்களை குறை சொல்லியே தன்னை நியாய படுத்தும் மேதைகளா, சிந்தியுங்கள் ….
மதிப்புமிகு சித்தர் அவர்களுக்கு , தங்களின் மக்களுக்காக வழங்கப்பட்ட நிதி ; அதன் விவரத்தை அறிந்துக்கொள்ள கேள்வி கேட்க , ஆனந்திக்கு உரிமை உண்டு ! பணம் சோரம் போனதா இல்லையா என்பதனை சரியான விளக்கத்தை பெற்ற பின்புதானே
முடிவு செய்யமுடியும் !
அனந்தி ஒரு அரைவேச்காடு என்பது எனது கருத்து. அந்த அரைவேட்காடால் என்ன சாதிக்க முடிந்தது? இங்கு உள்ள நண்பன் நாளிதழ் அவரை உசுப்பி விட்டு தனது வாணிப்பத்தை அதிகரித்துக்கொண்டது. மற்ரபடி புதுசா எததையாச்சும் கண்டு பிடித்து தான் சொந்னது சரி என்று நிருப்பிக்க லோ லோ ந்னு அலவாரு. அப்படியே ச்ய்தி கிடச்சாலும் படிக்க ஆலூ கிடைகனும்.
நண்பன் போட்ட தலைபு செய்தியெல்லாம் ஒரு வித்பனைகுதான் என்பது அனந்திக்கு திர்யாது. நன்பன் பத்த்ரிக்கை தமிழர்களுக்கு ஆதரவனது கிடையாது. அது அவனுகு ஒரு வனிபம் அவ்லொதான் .