தெங்கு அட்னான்: சொத்துகளைப் பகிரங்கமாக அறிவிப்பது குடும்பத்தினருக்கு ஆபத்தாக முடியும்

adnanகூட்டரசுப்  பிரதேச   அமைச்சர்   தெங்கு   அட்னான்  தெங்கு  மன்சூர்   தம்  சொத்து  விவரங்களைப்  பகிரங்கமாக    அறிவிக்கப்  போவதில்லை.  அவ்வாறு  செய்வது  குடும்பத்தினருக்கு  ஆபத்தாக   முடியலாம்   என்றவர்    அஞ்சுகிறார்.

தாமும்  கோலாலும்பூர்   மேயர்   அமின்  நோர்டின்   அப்துல்  அசிசும்,  பகிரங்கமாக   இல்லை   என்றாலும்கூட ,   சொத்து   விவரங்களை   ஆண்டுதோறும்   அறிவித்து  வருவதாக   அவர்   சொன்னார்.

“அதைப்  பகிரங்கமாக    அறிவிக்க  முடியாது.   ஏனென்றால்,  நான்   ஏற்கனவே   தொழில்  செய்தவன்.  என்னிடம்  சொத்துகள்  நிறைய  உண்டு.

“என்னிடம்  உள்ளதை   அறிவிக்க   இயலாது.  அப்படிச்  செய்தால்  என்  பிள்ளைகள்,  மனைவி  கடத்தப்படலாம்.  என்னவெல்லாமோ   நடக்கலாம்.  கொள்ளையர்கள்   எங்களைக்  குறி   வைக்கலாம்”,  என்று  தெங்கு  அட்னான்   இன்று  கோலாலும்பூரில்  செய்தியாளர்களிடம்    கூறினார்.

தாம்  ஒவ்வோராண்டும்   பிரதமரிடம்   சொத்து  விவரங்களை    அறிவித்து  வருவதாகவும்   மேயர்   அரசாங்கத்    தலைமைச்   செயலாளரிடம்   சொத்துகளை   அறிவிக்கிறார்  என்றும்    அமைச்சர்  விளக்கினார்.