பொது ஒழுங்கு கெட்டால் அலி திஞ்சுதான் பொறுப்பு: மாணவர்கள் வலியுறுத்து

studentsஆகஸ்ட்  27-இல்   பொது  ஒழுங்குக்குக்  கேடு  ஏற்பட்டால்   அதற்கு   ‘TangkapMO1’ பேரணியைக்  கண்டித்து    ‘சிவப்புச்   சட்டை’யினர்  நடத்தும்  எதிர்- பேரணிதான்   காரணமாக  இருக்கும்  ‘TangkapMO1’ பேரணியை  ஆதரிக்கும்   மாணவர்கள்    கூறினர்.

“அன்று   ஏதேனும்   நிகழ்ந்தால்   அலி திஞ்சுதான்  பொறுப்பு.

“தயவு   செய்து   எங்களை   நாடி  வராதீர்கள்.  அவரைத்   தேடிச்     செல்லுங்கள்.  அவர்  இப்போதே  எங்களைச்  சீண்டிவிடத்   தொடங்கி   விட்டார்”,  என்று  மாணவர்  ஒற்றுமை   முன்னணி   தலைவர்   அஷீக்  அலி   கூறினார்.