புதிய எம்ஏசிசி தலைவர் பேரரசர் முன்னிலையில் பதவி ஏற்றார்

dzulஇன்று   காலை  மலேசிய   ஊழல்தடுப்பு    ஆணைய(எம்ஏசிசி)    புதிய    தலைவர்  சுல்கிப்ளி  அஹ்மட்,      கோலாலும்பூரில்,  இஸ்தானா   நெகராவில்    மாட்சிமை  தங்கிய   மாமன்னர்   துவாங்கு   அப்துல்   ஹாலிம்   மு’வாட்சம்    ஷா  முன்னிலையில்  பதவி   உறுதிமொழி   எடுத்துக்  கொண்டார்.

சுல்கிப்ளி, 48,  முன்பு   சட்டத்துறைத்   தலைவர்   அலுவலகத்தில்   தேசிய    வருவாய்   மீட்டெடுப்புக்  குழு  இயக்குனராக     பணியாற்றியவர்.அபு  காசிம்   முகம்மட்   பணிஓய்வு   பெற்றதை   அடுத்து   அவர்    ஆகஸ்ட்  முதல்   நாள் எம்ஏசிசி    தலைவராக    நியமிக்கப்பட்டார். 2021  ஜூலை  31வரை  அவர்  அப்பதவியை  வகிப்பார்.