ஆயுதப்படைகளின் தலைவர் தேசிய பாதுகாப்பு மன்ற டிஜி

dgஇராணுவ  அதிகாரி   ஒருவர்   தேசிய   பாதுகாப்பு  மன்றத்தின்   தலைமை  இயக்குனராக (டிஜி)   நியமிக்கப்பட்டுள்ளார்.

அம்மன்றத்தின்    முதலாவது   தலைமை  இயக்குனராக    ஆயுதப்  படைகளின்  தலைவர்   ஜெனரல்   சுல்கிப்ளி  முகம்மட்  ஸின்   நியமனம்  செய்யப்பட்டிருப்பதை   துணைப்  பிரதமர்   ஜாஹிட்  ஹமிடி   நேற்று  நியு  யோர்கில்   அறிவித்தார்.

“தேசிய  பாதுகாப்புக்கும்   தற்காப்புக்கும்  நிலவும்  மருட்டல்களைக்  கருத்தில்  கொண்டு   போலீஸ்  அல்லது  இராணுவ   அதிகாரி  ஒருவரை  மன்றத்துக்குப்  பொறுப்பாளராக   அமர்த்த  அரசாங்கம்  முடிவு  செய்தது”,  என  ஜாஹிட்  கூறினார்.