நம்வீ-இன் தடுப்புக் காவலை நீட்டிக்க நீதிமன்ற உத்தரவைப் பெறும் போலீசின் முயற்சி தோல்வி

nameweeபினாங்கு  மெஜிஸ்திரேட்  நீதிமன்றம்  ஒன்று,  ரேப்  கலைஞர்   வீ  மெங்   சீ(நம்வீ)) -இன்   தடுப்புக்  காவலை  நீட்டிப்பதற்காக  போலீஸ்   செய்துகொண்ட  மனுவைத்   தள்ளுபடி   செய்தது.

காவலை  நீட்டிப்பதற்கான   மனு  தள்ளுபடி  செய்யப்பட்டாலும்   போலீசார்   நம்வீயை   விடுவிக்கவில்லை.  நம்வீயை  ஆகஸ்ட்  22-இலிருந்து  நான்கு  நாள்களுக்கு  விசாரணைக்காக    தடுத்து  வைக்கத்தான்  ஏற்கனவே  உத்தரவு  பெறப்பட்டிருந்தது.  அவரை  போலீசார்  மீண்டும்  ஜாலான்  பட்டானி  போலீஸ்  நிலையத்துக்குக்  கொண்டு  சென்று  விட்டதாக    அவரின்  வழக்குரைஞர்   டி.  தருமா  கூறினார்.

“போலீசார்  அவரை    விடுவிக்காதது   ஏன்  என்று   தெரியவில்லை.  போலீஸ்  நிலையம்   சென்று   கேட்கப்  போகிறேன்”,  என்று  தருமா  சொன்னார்.

அவரை  விடுவிக்காவிட்டால்  இன்று  மாலை  ஐந்து  மணிக்குள்  அவரை  நீதிமன்றத்தில்  நிறுத்திக்  குற்றம்  சாட்ட  வேண்டும்        என்றாரவர்.