பிலிப்பீன் இஸ்லாமிய தீவிரவாதிகள் பிணையாளியின் தலையைத் துண்டித்தனர்

philiதென்   பிலிப்பீன்சில்   பிணையாளி  ஒருவருக்குப்  பிணைப்பணம்   கொடுக்கப்படாததால்   ஆத்திரமடைந்த   இஸ்லாமிய   தீவிரவாதிகள்  பிணையாளியின்  தலையைத்    துண்டித்ததாக   இராணுவப்  பேச்சாளர்,  மேஜர்  பிலிமோன்  டான்  கூறினார்.

பெட்ரிக்  ஜேம்ஸ்   அல்மோடாவர்  என்று  அடையாளம்  கூறப்பட்ட   அப்பிணையாளியின்  துண்டிக்கப்பட்ட   தலை   மணிலாவுக்கு   ஆயிரம்   கிலோமீட்டர்   தெற்கே   ஜோலோ  தீவின்    ஒரு  கிராமத்தில்   கண்டெடுக்கப்பட்டதாக    அவர்  சொன்னார்.

பிளாஸ்டிக்  பையில்  சுற்றப்பட்டு,  ஒரு  சாலை  ஓரமாக   அது  வீசப்பட்டிருந்தது.

அல்மோடாவர்  ஜூலை  16-இல்   ஜோலோ  நகரில்  அபு சய்யாவ்   தீவிரவாதிகளால்  கடத்தப்பட்டார்.  அவரை  விடுவிக்க   கடத்தல்காரர்கள்  ஒரு  மில்லியன்  பெசோ (ரிம24,000)  கோரினார்கள்.