பிரதமர் வாக்களித்தபடி சரவாக் எஸ்பிம் மாணவர்களுக்கு மடிக் கணினி வழங்கினார்

najibநஜிப்   அப்துல்    ரசாக்   சரவாக்  எஸ்பிம்   மாணவர்களுக்கு  அளித்த   வாக்குறுதியை  இன்று  நிறைவேற்றினார்.  அவர்கள்  ஒவ்வொருவருக்கும்  மடிக்  கணினி  வழங்கப்படுகிறது.

ஏப்ரல்   மாதம்,  சரவாக்,   சுங்கை   லாடோங்   பள்ளிக்குச்  சென்றிருந்தபோது  பிரதமர்  அம்மாநிலத்தில்  கல்வித்  தரத்தை  உயர்த்த  ஆர்வம்   கொண்டிருப்பதாகக்  குறிப்பிட்டார்.  அதன்  பொருட்டு   அம்மாநில   எஸ்பிஎம்  மாணவர்களுக்கு   மடிக்  கணினி   வழங்கப்படும்  என்றார்.

இத்திட்டத்தின்படி,   நகர்ப்புறங்களிலும்    கிராமப்புறங்களிலும்     மாநிலத்தின்  உள்பகுதிகளிலும்    உள்ள   33,000  எஸ்பிம்  மாணவர்கள்  மடிக்  கணினிகளைப்  பெறுவார்கள்.

“வாக்குறுதி  நிறைவேற்றப்பட்டது. சரவாக்  மாணவர்கள்  அவர்களின்  படிப்பில்  மேலும்  சிறப்பான  தேர்ச்சியைப்  பெறுவார்கள்  என்று  நம்புகிறேன்”,  என்று  புத்ரா  ஜெயாவில்  ஐந்து   மாணவப்  பேராளர்களிடம்     மடிக்  கணினிகளை  ஒப்படைக்கும்  நிகழ்வில்  நஜிப்   கூறினார்.