டாங் வாங்கி போலீஸ் நிலையத்துக்கும்முன் கெராக்கான் மெரா ஆர்ப்பாட்டம்

redகெராக்கான்    மெரா    இயக்கத்தினர்,    போலீசார்    சனிக்கிழமை   #TangkapMO1  பேரணியில்  கலந்து  கொண்டோரைக்  கைது  செய்யத்   தவறியதைக்  கண்டித்து  இன்று    டாங்  வாங்கி     போலீஸ்  மாவட்ட  தலைமையகத்துக்கு  வெளியில்     ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.

“(தங்காப்    எம்ஓ1   பேரணியில்  பங்கேற்ற)   சமூக    ஆர்வலர்களில்    எவரையும்  கைது   செய்யாததைக்  கண்டிக்கவே  இன்று  இங்கு  கூடியுள்ளோம்.

“போலீஸ்   பலவீனமாக   இருப்பதுபோல்   தெரிகிறது.  பேரணி    நடப்பதற்கு  முன்பே   போலீசில்  புகார்   செய்திருந்தோம்.  போலீசார்  ஏன்  அவர்களைக்  கைது   செய்யவில்லை?”,   என  கெராக்கான் மெரா  தலைவர்   முகம்மட்  அலி  பஹாரோம்(  அலி  திஞ்சு)   செய்தியாளர்களிடம்  வினவினார்.

போலீசார்  இரட்டை  நியாயத்தைப்  பின்பற்றுவதாகக்  குற்றஞ்சாட்டிய   அலி  திஞ்சு,   கெராக்கான்  மெரா   பேரணி   நடத்த   அனுமதி  மறுத்த   போலீசார்   தங்காப்  எம்ஓ1   பேரணி  நடப்பதற்கு  மட்டும்  இடமளித்தனர்,   அனுமதியின்றி  பேரணி   நடத்திய  அவர்களைக்  கைது  செய்யவும் இல்லை   என்றா