தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட’ மூன்று ஐஎஸ் தீவிரவாதிகள் கைது

isகேளிக்கை   மையங்கள்,   பத்துமலை  கோயில்,   போலீஸ்  நிலையங்கள்  ஆகியவற்றைத்   தாக்குவதற்குத்   திட்டமிட்டதாகக்  கூறப்படும்    முவரை   போலீஸ்  கைது   செய்தது.

ஐஎஸ்  தீவிரவாதிகள்  என்று   நம்பப்படும்   அம்மூவரும்   தேசிய  நாளுக்கு  முன்தினம்     தாக்குதல்    நடத்தத்    திட்டமிட்டிருந்தார்களாம்.

தாக்குதல்   நடத்தச்  சொல்லி     தற்போது    சீரியாவில்  உள்ள    மலேசியரான   ஐஎஸ்   தீவிரவாதி   முகம்மட்  வாண்டி   முகம்மட்   ஜெடி-இடமிருந்து   அவர்களுக்கு     உத்தரவு  வந்ததாக   போலீசார்    தெரிவித்தனர்.

அம்மூவருரையும்  புக்கிட்   அமான்   சிறப்புப்   போலீஸ்துறையின்   பயங்கரவாத   எதிர்ப்புப்  பிரிவினர்   ஆகஸ்ட்  27க்கும்   29க்குமிடையில்    சிலாங்கூர் ,  கோலாலும்பூர்,   பகாங்   ஆகியவற்றில்   கைது  செய்தனர்.

தாக்குதலுக்குப்  பின்னர்  மூவரும்   முகம்மட்  வாண்டியின்   உதவியுடன்   சீரியாவில்  ஐஎஸ்-ஸில்   சேர்ந்து  கொள்ள  திட்டமிட்டிருந்தனர்.