TangkapMO1 பேரணி: வாக்குமூலம் அளிக்க எம்பி-க்கு அழைப்பு

rally தங்காப்   எம்ஓ1  பேரணி    தொடர்பில்   வாக்குமூலம்   பெறுவதற்காக   போலீசார்    டிஏபி   நாடாளுமன்ற  உறுப்பினர் (எம்பி)  தியோ   கொக்  செங்-கை  அழைத்துள்ளனர்.

தியோ  பேரணி  ஏற்பாட்டாளர்களில்   ஒருவர்   அல்ல  என்பதால்    தன்னை   போலீஸ்  விசாரணைக்கு   அழைக்கும்   என்பதை     எதிர்பார்க்கவில்லை.

“நான்  ஏற்பாட்டாளன்    அல்ல.  மாணவர்களுக்கு   ஆதரவு   தெரிவிக்கவே    சென்றேன்.

“மஸ்ஜித்    நெகராவில்  ஒரு  லாரி    நிறுத்தப்பட்டிருந்தது.  அதிலிருந்து    பேசுமாறு    என்னைக்  கேட்டுக்கொண்டார்கள்.   அதற்காகத்தான்     என்னை  அழைத்திருக்கிறார்கள்    போலும்”,  என்று  ராசா  எம்பி  கூறினார்.

தியோ,  நாளை   டாங்  வாங்கி      மாவட்ட   போலீஸ்   தலைமையகம்   சென்று   வாக்குமூலம்    அளிப்பார்  எனத்   தெரிகிறது.