நஜிப்: மற்றவர்களை வெறுப்புக்குரியவர்களாக சித்திரிப்பது எளிது, ஆனால் அது மகா பாவம்

pm“வெறுப்பு   அரசியலை”க்  கண்டித்துப்   பேசிய  பிரதமர்    நஜிப்    அப்துல்   ரசாக்    அது    நாட்டுக்கு   முன்னேற்றத்தைக்  கொண்டுவராது   என்றார்.

“எதிர்தரப்பு    வெறுப்பு    அரசியலை  வைத்துதான்  விளையாடுகிறார்கள்.   அவர்கள்   நல்ல   திட்டங்களை   முன்வைப்பதில்லை”,  என  நஜிப்   தெரிவித்தார்.  அவர்  யாருடைய   பெயரையும்    குறிப்பிடவில்லை.

“மற்றவர்களை  வெறுப்புக்குரியவர்களாக    சித்திரிப்பது     எளிது. ஆனால்,  அது   மகா   பாவம்”,  என்றார்.

புத்ரி    அம்னோ    புத்ரா   உலக   வாணிக   மையத்தில்  இளம்   பெண்களுக்காக   ஏற்பாடு  செய்திருந்த   ஒரு    கூட்டத்தில்   கலந்து   கொண்டு  நஜிப்   பேசினார்.