முக்ரிஸ் கெடாவில்தான் போட்டியிடுவார்; புத்ரா ஜெயாவில் அல்ல

mukகெடாவின்   முன்னாள்   மந்திரி   புசார்   முக்ரிஸ்   மகாதிர்   அடுத்த   பொதுத்   தேர்தலில்   கெடாவில்தான்   போட்டியிடுவார்.

இதை   முக்ரிஸ்   சினார்   ஹரியானுக்கு   வழங்கிய    சிறப்பு   நேர்காணல்  ஒன்றில்   வலியுறுத்தினார்.

“சிலர்   நான்  புத்ரா  ஜெயாவில்   போட்டியிட  வேண்டும்    என்கிறார்கள்.  ஆனால்,  நான்  கெடாவைத்தான்   விரும்புகிறேன்.

“கெடாவில்   எந்த  இடம்   என்றால்,  அது  இரகசியம்,   சொல்ல   மாட்டேன்”,  என  பார்டி  பிரிபூமி  பெர்சத்து  மலேசியா(பெர்சத்து)   உதவித்   தலைவருமான  முக்ரிஸ்  கூறினார்.

அவர்  இப்போது   ஆயர்  ஈத்தாம்   சட்டமன்ற  உறுப்பினர்.  2008-இல்  ஜெர்லுன்  நாடாளுமன்றத்   தொகுதியிலும்    அவர்   வென்றார்.

மக்கள்  பெர்சத்து   கட்சியில்   சேர    ஆர்வம்   கொண்டிருப்பதாகவும்    ஆண்டு  இறுதிக்குள்   500,000  உறுப்பினர்களைச்  சேர்க்க   இலக்குக்   கொண்டிருப்பதாகவும்   அவர்  சொன்னார்.