மகாதிர்: எதிரணி வென்றால் முகைதின் பிரதமராவார்…… ஆனால்

dr m14வது   பொதுத்   தேர்தலில்   எதிரணி   வெற்றி   பெற்றால்   பார்டி    பிரிபூமி   பெர்சத்து   மலேசியா (பெர்சத்து)  இடைக்காலத்   தலைவர்    முகைதின்   யாசின்    பிரதமராகும்   வாய்ப்பு   உள்ளது.  அப்படித்தான்   முன்னாள்  பிரதமர்   டாக்டர்    மகாதிர்    முகம்மட்   கூறுகிறார்.

“இப்போது  பிரதமர்   யார்   என்று   அறிவிப்பது   சிலருக்கு   ஏமாற்றத்தை   அளிக்கலாம்.   அது  கட்சியைப்  பிளவுபடுத்தவும்   கூடும்.

“அதனால்  (  எதிர்காலப்   பிரதமரைத்    தேர்ந்தெடுக்க)  இப்போது   எதையும்  செய்யப்   போவதில்லை.   ஒருவேளை   எதிரணி   வென்றால்   முகைதின்  பெரும்பாலும்   பிரதமராகும்   வாய்ப்பு  உள்ளது.

“அதுவும்கூட   அவரது  கட்சியைப்  பொறுத்தது.  அது  அவரைத்   தலைவராக  ஏற்க   வேண்டும்,   எதிரணிக்   கூட்டணியும்    அவரைப்  பிரதமராக    ஏற்க   வேண்டும்”.  செப்டம்பர்   21-இல்    லண்டன்   பல்கலைக்கழகத்தில்   உரையாற்றியபோது   மகாதிர்   இவ்வாறு   கூறினார்.