ஜோகூர் அரச குடும்பத்தைப் பழித்துரைத்த மேலும் ஒரு முகநூல் பயனர் கைது

arrestஜோகூர் அரச குடும்பத்தைச்  சேர்ந்த   ஒருவரை  அவமதிக்கும் வகையில் முகநூலில்    கருத்துப்   பதிவு    செய்திருந்த   25-வயது    ஆடவர்   ஒருவர்   இன்று  கைது    செய்யப்பட்டார்.

பத்து காஜாவைச் சேர்ந்த அவர்    கோலாலும்பூரில்   செய்யப்பட்டார்.  அவர்    விசாரனைக்காக     ஜோகூருக்கு     அழைத்து   வரப்படுவார்   என   ஜோகூர்   போலீஸ்   தலைவர்   வான்   அஹ்மட்   நஜ்முடின்   கூறினார்.

“அவர் அரச குடும்பத்திற்கு எதிராகக் கருத்துத் தெரிவித்தாரா,    இல்லையா    என்பது முக்கியமல்ல. புகார்   செய்யப்பட்டது,   விசாரணை   செய்கிறோம்” என்று வான் அகமட் தெரிவித்ததாக   நியு   ஸ்ரேய்ட்ஸ்  டைம்ஸ்   கூறியது.