தியான் சுவா தேச நிந்தனைக் குற்றம் புரிந்திருக்கிறார்: நீதிமன்றம் தீர்ப்பு

mpபிகேஆர்   உதவித்    தலைவர்   தியான்   சுவா   மூன்று    ஆண்டுகளுக்குமுன்   ஒரு  கருத்தரங்கில்    ஆற்றிய  உரை   தேச  நிந்தனைக்  கருத்துகளைக்   கொண்டது   என   கோலாலும்பூர்   செஷன்ஸ்  நீதிமன்றம்    இன்று   தீர்ப்பளித்தது.

தியான்  சுவா  பயன்படுத்திய    சொல்கள்   தேச  நிந்தனைச்  சட்டம்  பகுதி4(1) (பி)-இன்படி     நிந்தனைக்குரியவை   என    நீதிபதி   சுல்கர்னைன்   ஹசான்    கூறினார்.

கருத்தரங்கில்,   தியான்   சுவா  ‘bangkit’ (திரண்டு   எழுக)  ‘turun ke jalan raya’ (தெருக்களில்  ஆர்ப்பாட்டம்  செய்வீர்)  என்ற  சொல்களைப்    பயன்படுத்தியதை    நீதிபதி     சுட்டிக்காட்டினார்.  அவை    தேச  நிந்தனை   நோக்கம்    கொண்டவை   என்றாரவர்.

அக்குற்றச்சாட்டுக்கு   அவருக்கு    கூடினபட்சம்   ரிம5,000   அபராதம்   அல்லது   மூன்றாண்டுச்  சிறை   அல்லது   இரண்டும்   சேர்த்து   விதிக்கப்படலாம்.

பத்து  தொகுதி   நாடாளுமன்ற    உறுப்பினரான    தியான்  சுவாவுக்கு   ரிம2,000  அபராதம்   அல்லது   ஓராண்டுக்குமேல்   சிறைத்தண்டனை   விதிக்கப்பட்டால்    அவர்   எம்பி   பதவியை   இழக்க  நேரும்.  அடுத்த  ஐந்தாண்டுகளுக்குத்    தேர்தலில்   போட்டியிடவும்   முடியாது.