பயணத்தடையை எதிர்த்து வழக்காட மரியா சின்னுக்கு நீதிமன்றம் அனுமதி

marinaகோலாலும்பூர்    உயர்   நீதிமன்றம்,    வெளிநாடு    செல்ல     விதிக்கப்பட்டுள்ள     தடையை    எதிர்த்து    வழக்காட   பெர்சே  தலைவர்   மரியா  சின்னுக்கு   அனுமதி   வழங்கியது.

பயணத்  தடையை    நீதிமுறை   மேலாய்வு   செய்ய   வேண்டும்    என்ற    மரியா  சின்னின்  கோரிக்கை   ஏற்றுக்கொள்ளப்படுவதாக   நீதிபதி    ஹஸ்மத்  நிக்   முகம்மட்    தீர்ப்பளித்தார்.

“அவரது  விண்ணப்பம்   அடாவடித்தனமானதோ    விளையாட்டுத்தனமானதோ   அல்ல   என்ற   முடிவுக்கு    நீதிமன்றம்  வந்துள்ளது”,  என்றாரவர்.

தீர்ப்பளிக்குமுன்னர்   அடிக்கடி   செய்திகளில்  பரப்பப்பூட்டிக்  கொண்டிருக்கும்   மரியா    நீதிமன்றம்  வந்துள்ளாரா     என்று   வினவிய   நீதிபதி,   அவரைப்   பார்க்க   விரும்புவதாகவும்   குறிப்பிட்டார்.

நீதிபதி   பெர்சே   தலைவருக்கு   ரிம3,000  செலவுத்  தொகை   வழங்கவும்    உத்தரவிட்டார்.