‘பினாங்கு உயர் நீதிமன்றத்தைப் பழுதுபார்க்கும் வேலைகள் நடக்கின்றன, ஆண்டு இறுதிவாக்கில் முடிவடையும்

rayarபினாங்கு   உயர்  நீதிமன்றத்தில்    நடக்கும்   பழுதுபார்க்கும்    பணிகள்   ஆண்டு   இறுதிவாக்கில்   முடிவுக்கு   வரும்   எனக்   கூட்டரசு   நீதிமன்றத்தின்   பதிவாளர்   அலுவலகம்     தெரிவித்தது.

டிஏபி-இன்   ஸ்ரீ  டெலிமா   சட்டமன்ற   உறுப்பினர்    ஆர்.எஸ். என்.  ராயர்,  அக்கட்டிடத்தில்   சுவர்களில்   விரிசல்கள்   ஏற்பட்டிருப்பதையும்,  கற்கள்   உதிர்ந்து   விழுவதையும்    சுட்டிக்காட்டியதை   அடுத்து     அது   இவ்வாறு   தெரிவித்தது.

“அவ்விவகாரத்துக்கு   முக்கிய   கவனம்   செலுத்தி    வருகிறோம்.  குத்தகையாளர்கள்   அமர்த்தப்பட்டு   பழுதுபார்க்கும்   வேலைகள்   நடைபெற்று   வருகின்றன.   2016   இறுதிக்குள்   வேலைகள்   முடிவுக்கு   வரும்    என    எதிர்பார்க்கப்படுகிறது”,  என்று  அதன்   அறிக்கை   கூறிற்று.