பிகேஆர் எம்பி-இன் சேவை மையத்தில் சிவப்புச் சாயம் வீசியடிக்கப்பட்டது

mpநேற்றிரவு    குவாந்தான்   பிகேஆர்   எம்பி   புசியா  சாலேயின்   சேவை   மையத்தின்மீது   யாரோ    சிவப்புச்   சாயத்தை   வீசியடித்திருந்தனர்.  அது  பெர்சே-எதிர்ப்பாளர்களின்    செயலாக   இருக்கலாம்    என்றவர்   நினைக்கிறார்.

இரவு   மணி    11.36க்கு   மோட்டார்சைக்கிள்   தலைகவசம்   அணிந்த   இருவர்    சாயத்தை   வீசியடிப்பதைக்   சிசிடிவி   படங்கள்  காண்பிப்பதாக   அவர்    தெரிவித்தார்.

“அது  ஒரு  மிரட்டலாக  இருக்கலாம்,  செயல்பாட்டைக்  குறைத்துக்  கொள்ளுங்கள்   என்ற  எச்சரிக்கையாக   இருக்கலாம்.  ஆனால்,   நான்  அதைக்  கோழைகளின்   அநாகரிமான   செயல்  என்றுதான்   சொல்வேன்.

“கண்ணியமானவர்களாக    இருந்தால்   நேரில்   வந்து   பேச    வேண்டும்.  ஆ  லோங்(கடன்   வசூலிப்பாளர்கள்)போல்   நடந்து  கொள்ளக்கூடாது.     ஆ  லோங்குகள்   இப்படித்தான்   மக்களை   மிரட்டுவார்கள்”,  என்றாரவர்.

பெர்சே   எதிர்ப்பு   இயக்கத்துக்கும்   இதற்கும்   தொடர்பு   இருக்கலாம்    என்றும்  புசியா    நினைக்கிறார்.