‘கபடதாரிகள்’, பிஎன் எம்பிகளைச் சாடினார் மகாதிர்

dr mபிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்குக்கு    எதிராகக்    குற்றச்சாட்டு    எதுவும்    கிடையாது   என்பதைக்   காரணம்காட்டி   அவரை  விடாப்பிடியாக    ஆதரிக்கும்   பிஎன்   எம்பிகளைக்   கபடதாரிகள்    என்று   முன்னாள்  பிரதமர்  டாக்டர்    மகாதிர்   முகம்மட்    விளாசினார்.

நஜிப்பை   எந்தக்  குற்றத்துக்காகவும்   குற்றம்   சாட்ட  முடியாது    என்பதை     அம்னோ,  மசீச   உள்பட   பிஎன்னில்   உள்ள   எல்லாக்   கட்சிகளுமே   நன்கு   அறியும்.   அவரது   குற்றச்செயல்கள்   நீதிமன்றம்   செல்வதைத்     தடுக்க     எல்லா   ஏற்பாடுகளும்    செய்யப்பட்டுள்ளன.

“நஜிப்  குற்றவாளி   என்று   தீர்மானிக்கப்படவில்லை    என்பதால்   அவரைப்  பிரதமராக   ஏற்பதாய்     அவர்கள்    கூறும்   காரணம்    அடிப்படையற்றது.

“அவர்கள்   தங்களுக்குத்   தாங்களே   பொய்யுரைக்கிறார்கள்.  மக்களிடமும்  பொய்   சொல்கிறார்கள். எல்லாருமே  கபடதாரிகள்.

“இந்தப்  பொய்யை   மெய்யாக்குவதில்   நஜிப்புக்கு   உறுதுணையாக   நிற்கும்  கபடதாரிகளான   எம்பிகளையும்   சமூகத்   தலைவர்களையும்   பெற்றிருப்பது    மலேசியாவின்   துரதிர்ஷ்டமாகும்”,  என்று  மகாதிர்   அவரது  வலைப்பதிவில்   பதிவிட்டிருக்கிறார்.

நஜிப்புக்கு   எதிராக   பல  ஆதாரங்கள்   உண்டு  என்று   மகாதிர்   கூறிக்கொண்டார்.  நஜிப்பின்   வங்கிக்   கணக்கில்   ரிம2.6   பில்லியன்   இருந்ததும்   அரசாங்கத்துக்குச்  சொந்தமான   எஸ்ஆர்சி  இண்டர்நேசனல்    நிறுவனத்திலிருந்து    ரிம42 மில்லியன்  மாற்றிவிடப்பட்டதும்   அமெரிக்க   நீதித்துறை   1எம்டிபி   மீது   நடத்தும்   விசாரணையும்     தக்க    ஆதாரங்களாகும்   என்றாரவர்.