பெர்சே 5 பேரணி தொடர்பாக மேலும் 4 ஹராபான் தலைவர்களிடம் போலீஸ் விசாரணை

polisமேலும்   நான்கு   பக்கத்தான்  ஹராபான்    தலைவர்கள்   பெர்சே  5  பேரணி   தொடர்பான   விசாரணைக்காக   இன்று  போலீஸ்  நிலையம்    சென்றனர்.

பக்கத்தான்   ஹராபான்  செயலக    உறுப்பினர்   சைபுடின்   அப்துல்லா,  பெனாந்தி   சட்டமன்ற   உறுப்பினர்    டாக்டர்   நோர்லெலா   அரிப்பின்,  செகிஞ்சான்   சட்டமன்ற  உறுப்பினர்   இங்   சுவி    லிம்,  அண்டாலாஸ்    சட்டமன்ற  உறுப்பினர்   சேவியர்  ஜெயகுமார்   ஆகியோரே   அந்நால்வருமாவர்.

நால்வரும்   இன்று  காலை   ட்ரேவர்ஸ்   போலீஸ்  நிலையம்   சென்று   வாக்குமூலம்   அளித்தனர்.

மேலும்  பலரும்   போலீசாரின்  விசாரணைப்   பட்டியலில்   இருப்பதாக   அவர்களின்   வழக்குரைஞர்   சைபுல்   இஜாம்  ரம்லி    தெரிவித்தார்.