டத்தோ பட்டம் கொண்ட அரசு அதிகாரி தடுத்து வைப்பு

maccகுத்தகை   வழங்கிய   விவகாரத்தில்   நிகழ்ந்த   ஊழல்   தொடர்பில்   டத்தோ   பட்டம்  பெற்ற  அரசாங்க   அதிகாரி   ஒருவர்  விசாரணைக்காக    நான்கு  நாள்களுக்குத்   தடுத்து  வைக்கப்பட்டார்.

நேற்று   பிற்பகல்  மணி   2க்கு  அவரைக்  கைது   செய்த   மலேசிய   ஊழல்  தடுப்பு   ஆணையம்   அவரது    வங்கிக்  கணக்கையும்   முடக்கி   வைத்தது.  அவரது  வங்கி  கணக்கில்   மில்லியன்  கணக்கில்   பணம்  இருப்பதாக   தெரிகிறது.

மலாக்கா    ஆயர்  கெரோ    மெஜிஸ்திரேட்     நீதிமன்றத்தில்   முன்னிலைப்படுத்தப்பட்ட     அந்த   அதிகாரியை  விசாரணைக்காக   நான்கு    நாள்  தடுத்து  வைக்க  மெஜிஸ்திரேட்   உத்தரவிட்டார்.

-பெர்னாமா