ஐஜிபி: மரியா திரும்பவும் கைது செய்யப்படும் சாத்தியம் உண்டு

mariaபோலீஸ்    படைத்   தலைவர்      காலிட்     அபு    பக்கார் ,     பெர்சே  தலைவர்   மரியா  சின்   அப்துல்லா   மீண்டும்  கைது   செய்யப்படும்   வாய்ப்பு  உள்ளதை   மறுக்கவில்லை.

இன்று   செய்தியாளர்   ஒருவரின்   கேள்விக்குப்   பதிலளிக்கையில்   மரியாமீது   அமைதிப்  பேரணிச்  சட்டத்தின்கீழும்   போலீஸ்  விசாரணை   மேற்கொண்டிருப்பதாக    அவர்   தெரிவித்தார்.

“பிபிஏ-இன்கீழ்   விசாரணை   செய்து   வருகிறோம். அது   உண்மை”,  என  காலிட்   இன்று  காலை   கூறினார்.

“தேவை  என்றால்  அவரைக்  கைது   செய்வோம்”,  என்றாரவர்.

நவம்பர்  18-இல்  பாதுகாப்புக்  குற்றங்களுக்காகக்  கைது     செய்யப்பட்ட   மரியா   நேற்று  விடுவிக்கப்பட்டார்.