பேராளர்: மலாய்க்காரர்கள் கட்சிக்கு விசுவாசமாக இருத்தல் வேண்டும் என்று கூறுவதை நிறுத்துவீர்

umnoஅம்னோ,    மலாய்க்காரர்கள் கட்சிக்கு   விசுவாசம்   காட்ட  வேண்டும்   என்று   கூறுவதை   நிறுத்திக்கொள்ள   வேண்டும்  என   ஜோகூர்  பேராளர்  ஒருவர்   வலியுறுத்தினார்.

மலாய்க்காரர்களின்றி   அம்னோ   ஒன்றுமில்லாததற்குச்  சமம்   என்று    கெமேலா   சட்டமன்ற  உறுப்பினர்  ஆயுப்   ரஹ்மாட்   கூறினார்.

“மலாய்க்காரர்கள்   விசுவாசமாக   இருக்க  வேண்டும்   என்று  கேட்டுக்கொள்வதை    அம்னோ  நிறுத்திக்கொள்ள   வேண்டிய   நேரம்  வந்தாயிற்று.

“அதற்குப்  பதிலாக,  இதுவரை   அவர்கள்  கொடுத்து   வந்துள்ள  ஆதரவுக்காக   அம்னோ    நன்றி  தெரிவிக்க  வேண்டும்”,  என  ஆயுப்  இன்று  அம்னோ  பொதுப்   பேரவையில்   கூறினார்.

மலாய்க்காரர்  உரிமைகளுக்கு   ஆபத்து   ஏதுமில்லை.  மாறாக,   21ஆம்  நூற்றாண்டில்   மலாய்க்காரர்கள்     போட்டியிட்டு    வெற்றிபெற  முடியுமா   என்பதே  இப்போதைய   பிரச்னை  என்றாரவர்.

அதற்கு   ஆறு  புதிய  அணுகுமுறைகள்   தேவை.  மலாய்க்காரர்களைப்  பொருளாதார  வலிவாற்றல்  மிக்கவர்களாக   மாற்றுதல்,  வாழ்க்கைத்  தரத்தை  உயர்த்துதல்,  மலேசியாவை   முன்னிலும்   இஸ்லாமிய   பற்றுள்ள  நாடாக   அதேவேளை   மிதவாத    நாடாக   உருவாக்குதல்,  தரமான  கல்வி,  நல்லாட்சி,    மலாய்க்காரர்களைச்  சிறந்த  சமூகமாகத்   திகழச்  செய்தல்   ஆகியவையே  அந்த   ஆறுமாகும்   என  ஆயுப்   கூறினார்.