சிறுவனை வீட்டில் தனியே விட்டுச் சென்ற பெண்ணுக்கு ரிம10,000 அபராதம்

courtதன்  பராமரிப்பில்    விடப்பட்டிருந்த    மூன்று வயது    சிறுவனை   வீட்டில்    தனியே   விட்டுச்  சென்ற    பெண்ணுக்கு   கோலா   பிலா   செஷன்ஸ்    நீதிமன்றம்     10,000 ரிங்கிட் அபராதம் விதித்து    240  மணி   நேரம்   சமூகச்   சேவை   செய்யவும்   உத்தரவிட்டது.

அபராதத்தைச் செலுத்தத் தவறினால்    அப்பெண்   ஓராண்டுச் சிறை தண்டனையை அனுபவிக்க  நேரும்.

ஷம்சினார்   அம்பியா    என்னும்   அப்பெண்   கடந்த   வியாழக்கிழமை   இரவு   ஏழு   மணிக்கு     தம்பின்,  கம்போங்   பாரிட்  பூலோவில்    வாடகைக்குக்  குடியிருக்கும்   வீட்டில்    அக்குற்றத்தைப்   புரிந்தார்.

ஷம்சினார்  அபராதத்  தொகையைச்   செலுத்த   ஒப்புக்கொண்டார்.