தமிழ் தாய் வாழ்த்துடன் சிறப்பாக நிறைவுற்ற ‘சகோதர இரட்டை நகர உடன்படிக்கை’

உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு கனடா சென்றுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் இன்று ‘சகோதர இரட்டை நகர உடன்படிக்கையில் கைச்சாத்திட்டார்.

மேலும் குறித்த நிகழ்வு தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி தாய் வாழ்த்துடன் ஆரம்பமானது. அத்துடன், அனைவருக்கும் தைப்பொங்கல் நல்வாழ்த்துடன் முதலமைச்சர் தனது ஆரம்ப உரையினை நிகழ்த்தினார்.

இதேவேளை, முல்லைத்தீவு நகரினை மேம்படுத்தும் நோக்கில் பிரம்ரன் மாநகசபை சகோதர இரட்டை நகர உடன்படிக்கை கைச்சத்தப்பட்டது.

குறித்த சந்திப்பில் இலக்கிய ஆர்வலர்கள், படைப்பாளிகள் போன்றவர்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-http://www.tamilwin.com

TAGS: