எம்ஆர்டி அறிமுகக் காலத்தில் 1.2 மில்லியன் பேர் அதில் பயணம் செய்துள்ளனர்

mrtடிசம்பர்   16-இல்    தொடங்கிய   சுங்கை   பூலோவுக்கும்    செமாந்தானுக்குமிடையிலான   எம்ஆர்டி     முதல்  கட்டச்  சேவையில்   நேற்றுவரை   பயணம்    செய்தவர்    எண்னிக்கை   சுமார்  1.2 மில்லியன்.

எம்ஆர்டியை    அறிமுகப்படுத்தும்   வகையில்   டிசம்பர்  16-லிருந்து  ஒரு   மாதத்துக்குப்   பயணிகள் எம்ஆர்டி-இல்    இலவசப்  பயணம்  செய்ய  அனுமதிக்கப்பட்டனர்.   அந்த  இலவசப்  பயணத்  திட்டம்   இன்றுடன்   முடிவுக்கு  வருகிறது.

இலவசப்  பயணக்   காலத்தில்   ஒவ்வொரு   நாளும்   27,000-இலிருந்து  30,000  பயணிகள்   எம்ஆர்டி-இல்   பயணம்   செய்ததாக  சுங்கை   பூலோ-  காஜாங்    இரயில்   சேவையின்   தலைமை   நடவடிக்கை   அதிகாரி   முகம்மட்  இசோம்   அசிஸ்   கூறினார்.