இராமசாமி: சுப்ராதான் தைப்பூசத்தில் அரசியலைக் கலக்கிறார்

ramasamyமஇகா    தலைவர்    டாக்டர்   எம்.சுப்ரமணியம்தான்    சமயத்தில்   அரசியலைக்  கலப்பதாக   பினாங்கு   துணை  முதலமைச்சர்  II பி.இராமசாமி    சாடியுள்ளார்.

ஆன்மிகம்    பேசும்    சுப்ரமணியம்   அதைப்  பின்பற்றவில்லை    என்று  இராமசாமி  விளாசினார்.

“இந்தியர்களைக்   கைவிட்டு    வெளிநாட்டவரான    செட்டியார்களை   ஆதரிக்கும்   அவர்   எந்த     ஆன்மிகத்தைப்   பற்றிப்   பேசுகிறார்?”,  என   இராமசாமி   வினவினார்.

“உண்மையான   தலைவராக   இருந்தால்   தண்ணீர்மலை   மலைக்  கோயிலுக்கும்   அவர்    வந்திருக்கலாம்.  அங்கு   இந்தியர்கள்   பெருந்  திரளாகக்    கூடியிருந்தனர்;  இரண்டுக்குமே    அவர்    சென்றிருக்கலாம்”,  என்று   மலேசியாகினியிடம்   கூறினார்.

“செட்டியார்   கோயிலுக்கு   மட்டுமே    சென்று   வெள்ளி  இரதத்தைத்    தற்காத்துப்    பேசிய   அவர்தான்   எல்லாவற்றையும்    அரசியலாக்குகிறார்”,  என்றாரவர்.

பினாங்கு   தைப்பூசத்   திருவிழாவில்   பினாங்கு   முதலமைச்சர்  லிம்   குவான்   எங்   சினமூட்டும்   வகையில்   பேசினார்    என்று   சுப்ரமணியம்   முகநூலில்   பதிவிட்டிருப்பதற்கு     இராமசாமி    இவ்வாறு    எதிர்வினை    ஆற்றினார்.