சசிகலா மேல்முறையீடு செய்து விடுதலையாக முடியுமா? பரபரப்பு தகவல்கள்

sasikala456உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சரியானது எனவும், சசிகலா மேல்முறையீடு செய்ய வாய்ப்பில்லை எனவும் மூத்த வழக்கறிஞர் பி. வி. ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் நால்வரும் குற்றவாளிகள் என தற்போது தீர்ப்பு வந்துள்ளது.

இந்த வழக்கில் பல வருடங்களாக முனைப்புடன் செயல்பட்டு வந்த கர்நாடகாவின் மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளார்.

அவர் கூறுகையில், உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு சரியானது, நீதி வென்றுள்ளது என கூறியுள்ளார்.

மேலும் சசிகலா குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டதால் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய முடியாது எனவும் ஆச்சார்யா கூறியுள்ளார்.

-http://news.lankasri.com

TAGS: