நிபந்தனைகளை நிறைவேற்றாவிட்டால் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை கிடைக்காது! ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை

gspஎதிர்வரும் ஏப்ரல் மாதம் 26ஆம் திகதிக்கு முன் இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளபோதிலும் அது தொடர்பில் முன்வைக்கப்பட்டிருக்கும் 11 நிபந்தனைகளை நிறைவேற்றாவிட்டால் அந்தச் சலுகை வழங்கப்படாதென ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாத்தல், மோசடிகளையும் துஷ்பிரயோகங்களையும் ஒழித்தல், இலாபமீட்டாத நிறுவனங்களை விற்றுவிடுதல்,

நீதிமன்றங்களின் சுயாதீனத்தை உறுதி செய்தல் உள்ளிட்ட 11 நிபந்தனைகளை நிறைவேற்றினால் மாத்திரமே இந்த வரிச்சலுகை கிடைக்கும் என்று ஐரோப்பிய ஒன்றியம் உறுதியாக உள்ளது.

ஏப்ரல் 21ஆம் திகதி பிரான்ஸின் பொதுத் தேர்தல் நடைபெறவிருப்பதால் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை தொடர்பில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை இலங்கை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

தவறினால் அந்தச் சலுகை நிரந்தரமாகவே கிடைக்காமல் போகலாம் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை செய்திருப்பதாக அரசின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

-http://www.tamilwin.com

TAGS: