பாஸ் கட்சியின் சட்டம் 355 பேரணிக்கு ஆட்சேபம் இல்லை, ஹமிடி கூறுகிறார்

 

noobjectionhamidiஎதிர்வரும் சனிக்கிழமை பாஸ் கட்சி நடத்தவிருக்கும் சட்ட 355 பேரணியை உள்துறை அமைச்சு ஆட்சேபிக்கவில்லை என்று உள்துறை அமைச்சரும் துணைப் பிரதமருமான அஹமட் ஸாகிட் ஹமிடி கூறினார்.

இப்பேரணியை பாடாங் மெர்போக்கில் நடத்துவதற்கு டிபிகேஎல் அனுமதி வழங்கியிருப்பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர் போலீசாரும் அப்பேரணிக்கு ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என்றார்.

முன்மொழியப்பட்டிருக்கும் ஷரியா நீதிமன்றங்கள் (கிரிமினல் நீதிபரிபாலனம்) சட்டம் 1965 (சட்டம் 355)க்கான திருத்தங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு சுமார் 200,000 ஆதரவாளர்கள் இப்பேரணியில் பங்கேற்பார்கள் என்று பாஸ் கட்சி நேற்று அறிவித்திருந்தது.