கார் மோதியதில் சைக்கிளோட்டிகள் எண்மர் பலி

ஜோகூர்  பாரு     ஜாலான்   லிங்காரான்    டாலாமில்   கார்  ஒன்று   மோதியதில்   எட்டு   சைக்கிளோட்டிகள்  பலியானார்கள்.

இன்று    அதிகாலை    மூன்று    மணிக்கு     நிகழ்ந்த    அவ்விபத்தில்    மேலும்   அறுவர்   காயமுற்றனர்   அவர்களில்    இருவர்   ஆபத்தான   நிலையில்   இருப்பதாக   ஜோகூர்   பாரு   செலாத்தான்   மாவட்ட   போலீஸ்   தலைவர்   ஏசிபி   சுலைமான்    சாலே    தெரிவித்தார்.

13  வயதுக்கும்   17  வயதுக்குமிடைப்பட்ட    30, 40   இளைஞர்கள்    ஜாலான்  லிங்காரான்  டாலாமில்   சாலையை  மறித்துக்கொண்டு    சைக்கிளோட்டிச்  சென்றதாக  அவர்   கூறினார்.

“அப்போது   தாமான்  பிலாங்கைச்   சேர்ந்த     22-வயது   பெண்   ஓட்டிவந்த   கார்,  சரியான     நேரத்தில்    பிரேக்    போடாததால்  சைக்கிளோடிகள்மீது   மோதியதாகத்    தெரிகிறது” ,   என  சுலைமான்   கூறினார்.