பிள்ளைகள்மீது ஒரு கண் வையுங்கள்: பெற்றோருக்கு ரோஸ்மா அறிவுறுத்து

rosmah பெற்றோர்கள்    தங்களின்   பிள்ளைகளிடம்    கண்டிப்பாக      நடந்து  கொள்ள       வேண்டும்      என்கிறார்   ரோஸ்மா    மன்சூர்.  ஜோகூரில்  அதிகாலை    வேளை    பதின்ம   வயது   சைக்கிளோட்டிகள்   எண்மர்   பலியான   சம்பவதை   அடுத்து    அவர்  பெற்றோருக்கு   இந்த    அறிவுரையை    வழங்கினார்.

பிள்ளைகள்   எங்கே  போகிறார்கள்,  என்ன   செய்கிறார்கள்   என்பதையும்   பெற்றோர்   அறிந்து  வைத்திருக்க    வேண்டும்   எனப்    பிரதமரின்    துணைவியார்   சொன்னார்.

“அச்சம்பவம்   மிகுந்த   வருத்தமளிக்கிறது.  பெற்றோர்   பிள்ளைகளிடம்   முழுக்  கவனம்   செலுத்த    வேண்டும்.

“அவர்கள்(பிள்ளைகள்)   வெளியே   சென்றால்,   அவர்கள்   யாருடன்   சேர்கிறார்கள்,  என்ன    செய்கிறார்கள்,  எப்போது    திரும்பி    வருவார்கள்   என்பதையெல்லாம்   கேட்டு  வைத்துக்கொள்ள   வேண்டும்.

“பெற்றோர்   கண்டிப்பு  காட்ட  வேண்டும்”.  இன்று   புத்ரா  ஜெயாவில்  பாலியல்   குற்றங்கள்மீதான   கருத்தரங்கைத்   தொடக்கி  வைத்த   பின்னர்   ரோஸ்மா   செய்தியாளர்களிடம்   பேசினார்.