பாலியல் அடிமைகளாக தமிழ் பெண்கள்: இலங்கைக்கு எதிராக தமிழ் நாட்டில் போர்க்கொடி

thirumavalavanதமிழ் பெண்களை பாலியல் அடிமைகளாக வைத்திருந்த இலங்கை படையினரை உடனடியாக கைது செய்து தண்டிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் இந்திய அரசு இலக்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போதும், அதன் பின்னரான காலப்பகுதியிலும் தமிழ் பெண்கள் பல்வேறு துன்பங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், தமிழ் பெண்களை பாலியல் அடிமைகளாக இலங்கை படையினர் பயன்படுத்தியுள்ளார்கள் என்ற உண்மை தற்போது அம்பலமாகியுள்ளது.

இந்த கொடூர குற்றசெயற்பாடுகளில் ஈடுபட்ட இலங்கை படையினர் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும். இதற்கு இந்திய அரசு இலக்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

தமிழ் பெண்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் இந்த கொடுமை இனப்படுகொலையை விட மோசமானது. எனவே தற்போதாவது சர்வதேச சமூகம் போர் குற்றங்களில் ஈடுபட்டவர்களை தண்டிக்க விரைந்து செயற்பட வேண்டும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-http://www.tamilwin.com

TAGS: