சென்னையை போட்டுத் தாக்கவுள்ள அடுத்த பேரிடர்: எச்சரிக்கும் ஆய்வாளர்கள்

chennai dryதமிழகத்தின் தலைநகர் சென்னையை மிக விரைவில் குடிநீர் பஞ்சம் போட்டுத் தாக்கவிருப்பதாக ஆய்வாளர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் தற்போதைக்கு 40 நாட்களுக்கான குடிநீர் மட்டுமே கையிருப்பு இருப்பதாக தமிழக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததால், தமிழகம் முழுவதும் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

பெரும்பாலான நீர்த் தேக்கங்கள் வற்றியுள்ளதால் மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் அதிகாரிகள் விழி பிதுங்கி நிற்கின்றனர்.

இந்நிலையில் சென்னைக்கு தேவையான குடிநீர் 40 நாட்களுக்கு மட்டுமே கையிருப்பு இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர்.

சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய குடிநீர் ஆதாரமான வீராணம் ஏரி வறண்டு போயுள்ளதால் அங்கிருந்து சென்னைக்கு குடிநீர் அளிப்பது நிறுத்தப்பட்டுள்ளது.

அதே போல் ஆந்திராவில் இருந்து வரும் கிருஷ்ணா நீர் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் இன்னும் சில மாதங்களில் துவங்க உள்ள கோடைக் காலத்தில் சென்னை நகர் மிகப்பெரிய குடிநீர் பஞ்சத்தை எதிர் நோக்கியுள்ளது.

தற்போதைய சூழலில் கோடை மழை பெய்தால் மட்டுமே சென்னை குடிநீர் பஞ்சத்தை தீர்க்க முடியும் எனவும் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க பல திட்டங்களை செயல்படுத்த உள்ளதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தற்போதைய அரசியல் நெருக்கடியில் மக்கள் நலனில் அக்கறையுடன் அரசு துரிதமாக செயல்பட்டால் மட்டுமே இந்த குடிநீர் பஞ்சத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியும் என சமூக ஆர்வலர்களும் ஆய்வாளர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

-http://news.lankasri.com

TAGS: