ஊழல் குற்றத்துக்காக பேராக் குடிநுழைவு இயக்குனரும் மேலும் மூவரும் கைது

arrestமலேசிய   ஊழல்தடுப்பு   ஆணையம்(எம்ஏசிசி),    ஊழல்  குற்றத்துக்காக     பேராக்   குடிநுழைவுத்  துறை  இயக்குனரையும்   மேலும்   மூவரையும்   இன்று   கைது    செய்தது.

நள்ளிரவுக்கும்    காலை  மணி   5.30க்குமிடையில்    அவர்கள்   கைது   செய்யப்பட்டதாக   எம்ஏசிசி  ஓர்    அறிக்கையில்    கூறியது.

குடிநுழைவு  இயக்குனர்    தவிர்த்து   கைதான    மற்ற   மூவரில்   இருவர்   வணிகர்கள்,  ஒருவர்  மெக்கானிக்.

அவர்கள்   கேளிக்கை  மையங்கள்,  உடம்புப்  பிடி   நிலையங்கள்   ஆகியவற்றிடமிருந்து  கையூட்டு   பெறும்   விவகாரத்தில்     தொடர்புள்ளவர்கள்  என்று  கூறப்படுகிறது.

நால்வரும்  இன்று   தொடங்கி   ஐந்து   நாளைக்கு   விசாரணைக்கு   உதவியாக    தடுத்து   வைக்கப்பட்டனர்.