ஜாகிர் நாய்க்கைக் கைதுசெய்து நாடு கடத்துவீர், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

vedaசமூக    ஆர்வலர்கள்     அடங்கிய    குழு  ஒன்று,   சர்ச்சைக்குரிய   சமயப்   பிரசாரகர்   ஜாகிர்   நாய்க்கைக்  கைது   செய்து    நாடு  கடத்த   உத்தரவிட   வேண்டும்   என்று   கேட்டுக்கொள்ளும்   மனு   ஒன்றை  இன்று   நீதிமன்றத்தில்   தாக்கல்   செய்தது.

“ஜாகிர்  நாய்க்கை   உடனடியாகக்  கைது    செய்யுமாறு   இன்ஸ்பெக்டர்- ஜெனரல்  அப்   போலீசுக்கு     ஆணையிட    வேண்டுமெனக்   கேட்டுக்  கொண்டிருக்கிறோம்.

“அத்துடன்,   அவருக்கு   நிரந்தர   வசிப்பிடத்   தகுதி    வழங்கப்பட்டிருந்தால்   அதைத்   திரும்பப்   பெற்றுக்கொண்டு    அவரை   உடனடியாக    நாடு   கடத்த    உத்தரவிட    வேண்டும்   என்றும்   கேட்டுக்கொண்டிருக்கிறோம்”,  என   ஹிண்ட்ராப்  தலைவர்   பி.வேதமூர்த்தி  கூறினார்.  வேதமூர்த்தி,   இன்று  மனுவைக்   கோலாலும்பூர்   உயர்  நீதிமன்றத்தில்   தாக்கல்    செய்த  பின்னர்    செய்தியாளர்களிடம்   பேசினார்.

அம்மனுவை    வேதமூர்த்தியும்   இதர   18  பேரடங்கிய   குழுவும்   தாக்கல்    செய்தது.   அக்குழுவில்   பிங்கோர்   சட்டமன்ற    உறுப்பினர்   ஜெப்ரி   கிட்டிங்கான்,  வழக்குரைஞர்    சித்தி   காசிம்,  கொள்கை  முன்னெடுப்பு   மைய   இயக்குனர்   லிம்   டெக்  கீ  முதலானோர்   இடம்பெற்றுள்ளனர்.