நீதிமன்றத் தீர்ப்புகளில் அரசு தலையீடு இல்லவே இல்லை- தலைமை நீதிபதி

cjஎந்த  ஒரு   வழக்கிலும்    அரசாங்கம்  தலையிடுவதில்லை    என்கிறார்   மலேசியாவின்    தலைமை    நீதிபதி    அரிப்பின்   ஜக்கரியா.

“தலையீடு   இருந்ததே   இல்லை.  வழக்குகளை   நாங்கள்    சுதந்திரமாகத்தான்   விசாரிக்கிறோம்”,  என   அரிப்பின்   இன்று   பெர்னாமா   நேர்காணல்    ஒன்றில்    கூறினார்.

நீதிமன்றங்கள்    கூட்டரசு,  மாநில     அரசுகளுக்கு    எதிராகக்கூட    தீர்ப்பளித்ததுண்டு.   “அவர்கள்   தீர்ப்பை   ஏற்கத்தான்   வேண்டும்”,  என்றாரவர்.

வழக்கில்   கொடுக்கப்படும்    தீர்ப்பில்   திருப்தி    இல்லையென்றால்     மேல்   நீதிமன்றத்துக்குச்   செல்லலாம்.   “இதுதான்    நடைமுறை..  ஒவ்வொரு   முடிவுக்கும்   நாங்கள் (நீதிபதிகள்)  காரணம்  கூறியாக   வேண்டும்”.

இம்மாத   இறுதியில்   கட்டாய   பணி   ஓய்வில்     செல்லும்   அரிப்பின்,   தீர்ப்பு    சொல்லப்படும்   முன்பே   மக்கள்   குறை   சொல்லத்    தொடங்கி    விடுவதை    நிதுனைத்தால்  “சில  வேளைகளில்   வருத்தமாக  இருக்கிறது”,  என்றார்.

தலைமை    நீதிபதிக்கு    வயது  67.  கடந்த   ஆண்டு    அவருக்கு  6மாத   கால  பதவி   நீட்டிப்பு   வழங்கப்பட்டது”.

நீதிபதிகள்   பணி ஓய்வு   வயது   66.