பிஎன் பங்காளிகள் எச்சரிக்கையையும் மீறி சட்டம் 355 திருத்தத்தைத் தாக்கல் செய்வதில் அரசாங்கம் உறுதி

dpmபிஎன்  ஆளும்  கட்சி   உறுப்புக்   கட்சிகள்   வேண்டாம்   என்று   எச்சரித்திருந்தாலும்  அரசாங்கம்   ஷியாரியா   நீதிமன்ற(குற்றவியல்   நீதி)ச்  சட்டத்தைத்   திருத்தம்   செய்ய    சட்டவரைவைக்    கொண்டுவருவதில்    உறுதியாக   இருப்பதாய்த்    துணைப்  பிரதமர்    அஹ்மட்  ஜாஹிட்   ஹமிடி    கூறினார்.

“அரசாங்கம்   தானே   சட்டம்   355(திருத்தத்தை)-ஐ  விரைவில்     நாடாளுமன்றத்தில்    தாக்கல்    செய்யும்”,   என்றவர்   கூறியதாக   பெர்னாமா   அறிவித்துள்ளது.

அச்  சட்டத்   திருத்தம்  மற்ற   சமயங்களுக்கு   அச்சுருத்தல்   அல்ல    என்றும்   அவர்   சொன்னார்.

கோலா  திரெங்கானுவில்   அம்னோ   கிளைகளிடையே  உரையாற்றிய   ஜாஹிட்,  அச்சட்ட  வரைவு   நடப்பு   நாடாளுமன்றக்  கூட்டத்   தொடரில்    கொண்டுவரப்   படுமா   என்பதை       குறிப்பிடவில்லை.