புலம்பெயர் தமிழர்களிடம் வடமாகாண முதலமைச்சர் விடுக்கும் அவசர கோரிக்கை

vikneswaran_4யாழ் குடாநாட்டை அபிவிருத்தி செய்ய புலம்பெயர் நாடுகளிலுள்ள பொறியியலாளர்கள் தாயகம் திரும்ப வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்தார்.

யாழ் குடாவை அபிவிருத்தி செய்ய உலக வங்கி 65 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளது.

இந்நிலையில் வெளிநாடுகளிலுள்ள எமது பொறியியலாளர்கள் இங்கு வந்து பணியாற்ற உடன் முன் வரவேண்டும் என வட மாகாண முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.

உலக வங்கியின் பிரதிநிதிகளிற்கும் வட மாகாண முதலமைச்சர் தலமையிலான குழுவினருக்கும் இடையில் நேற்று சந்திப்பொன்று நடைபெற்றது. இதன்போது இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வட மாகாண முதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில் ,

யாழ்ப்பாணக் குடாநாட்டிற்குள் உலக வங்கியின் 65 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியில் மேற்கொள்ளப்படவுள்ள பல திட்டங்களிற்குரிய பொறியியலாளர்கள் பற்றாக்குறையாகவுள்ளமையே அத் திட்டங்களை ஆரம்பிப்பதில் உள்ள ஒரே தடையென உலக வங்கிப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இதனால் இவ்வாறு தடையாகவுள்ளதாக தெரிவிக்கப்படும் பொறியியலாளர்கள் எமது பிரதேசத்தில் குறிப்பிட்டளவில் மட்டுமே உள்ளனர். அவர்களை இப்பணிக்கு விடுவித்தால் அவர்கள் தற்போது ஆற்றும் பணிகள் பாதிக்கப்படும். அல்லது பகுதியளவில் பணியாற்றினாலும் குறித்த திட்டத்தினை முழுமை செய்ய முடியாத நிலமையே கானப்படும்.

எனவே புலம்பெயர் நாடுகளில் உள்ள எமது உறவுகளில் பலர் இதே பொறியியலாளர்களாக வெளிநாடுகளில் பணி புரிகின்றனர். எனவே அவர்கள் இங்கு வந்து எமது உறவுகளிற்காக பணியாற்ற உடன் முன் வரவேண்டும்.

உறவுகள் கரிசணை கொண்ட புலம்பெயர்ந்தவர்களிற்கான ஓர் வாய்ப்பு இதில் அதிக வருமானத்தினை எதிர்பார்க்காது கிடைக்கும் வருமானத்துடன் தாயக உறவுகளிற்கான ஓர் பணியாக கொண்டு தேவையாற்ற முன் வரவேண்டும் என முதலமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: