ஆபத்தான கட்டத்தில் இலங்கை! விரைவில் சர்வதேச விசாரணை! பிரபாகரனின் கனவு நனவாகும் வாய்ப்பு அதிகம்!

prabhakaran01ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டமை, ஆபத்தான விடயம் என சிரேஷ்ட அரசியல் ஆலோசகர் கலாநிதி தயான் ஜெயதிலக தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றம் தொடர்பான பொறுப்புக் கூறல் விடயத்தில் மேலும் கால அவகாசம் வழங்கப்பட்டமை இலங்கைக்கு மிகவும் ஆபத்தானதுடன், சர்வதேச விசாரணையில் வந்து முடியும் என அவர் எச்சரித்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான முதல் பிரேரணையில் நிராகரிக்கபட்ட அனைத்தையும் இரண்டாம் கட்டத்தில் நிறைவேற்றவும் விடுதலைப் புலிகள் எதிர்பார்க்கும் அனைத்தையும் பெற்றுக்கொள்ளவுமே கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நகர்வை உடனடியாக தடுக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் சர்வதேச விசாரணைக்கு இலங்கை முகங்கொடுக்கு வேண்டிய அபாயம் உள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜெனீவா பிரேரணையை நிறைவேற்றுவதற்காக இலங்கைக்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கியிருப்பதன் மூலம் ஆரம்பத்தில் அரசாங்கம் எதிர்த்த, நிராகரித்த விடயங்களை இந்த அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.

நாட்டுக்கு எதிராக கடந்த காலத்தில் சர்வதேச தரப்பு கொண்டுவந்த பிரேரணையை மஹிந்த அரசாங்கம் எதிர்த்த நிலையில் மைத்திரி அரசாங்கம் அதனை முழுமையாக ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்த இணக்கம் தெரிவித்துள்ளது.

பிரபாகரனை காப்பாற்ற முயற்சி செய்த நபர்களே இன்று ஜெனிவா பிரேரணையை கொண்டு வந்துள்ளனர். இதில் புலிகளை நியாயப்படுத்திய நபர்களும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் இறுதி யுத்தத்தில் பிரபாகரனை காப்பாற்ற கடும் முயற்சி எடுத்த நபர்கள் தெரிவிக்கும் கருத்துக்களையும் நிறைவேற்றவே அரசாங்கம் முயற்சிக்கின்றது.

ஆகவே தமிழர் தரப்பும் புலம்பெயர் அமைப்புகளும் புலிகளின் பிரதிநிதிகளும் எதை எதிர்பார்த்து செயற்படுகின்றனரோ அதை அடையும் பாதையை அரசாங்கம் தனது இணக்கத்தின் மூலம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: