அமெரிக்காவில் இரவு விடுதியில் துப்பாக்கிச் சூடு: 14 பேர் படுகாயம்

america flagஓஹியோ மாநிலம், சின்சினாட்டியின் இரவு விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன், இந்த தாக்குதலில் 14 பேர் வரையில் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தாக்குதல் சம்பவமானது,, கேமியோ இரவு விடுதியில் நடைபெற்றதாக சின்சினாட்டி பொலிஸார் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

மேலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் பலர் காயமடைந்துள்ளனர் என துணை பொலிஸ் அதிகாரி ஒருவர் இந்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

“இரவு விடுதியில, கொடூரமான நிலைமையின் இடையில் பல வகையில் பாதிக்கப்பட்டவர்களுடன் நாங்கள் இருக்கிறோம்” என அவர் தெரிவித்தார்.

இதேவேளை, “கொலைகள் தடுப்பு பிரிவு இரவு முழுவதும் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

-http://www.tamilwin.com